திருப்பூர், நவ.10- திருப்பூர் அருகே கொடு வாயில் தலித் இளைஞரை காரில் கடத்திச் சென்று, சாதி ஆதிக்க கும் பல் கட்டி வைத்து தாக்கி சாதியைச் சொல்லி இழிவு படுத்தியது. தகவல் அறிந்து தீண்டாமையை ஒழிப்பு முன்னணி முயற்சி மேற் கொண்டதால் அந்த இளைஞர் மீட் கப்பட்டார். இது பற்றிய விவரம் வரு மாறு: கொடுவாய் சந்தை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் (29). இவருக்கு மனைவி மதுமிதா மற்றும் மகள் மிருதிள்யா ஶ்ரீ ஆகி யோர் உள்ளனர். பிரதாப் தனியார் நிதி நிறுவ னத்தில் வேலை செய்து வருகி றார். இவரது தாயார் பாப்பா திருப்பூ ரில் சமையலராக வேலை செய்து வருகிறார். கடந்த ஏழாம் தேதி திருப் பூரில் இருந்து பஸ்ஸில் வந்த தனது அம்மாவை வீட்டிற்கு அழைத் துச் செல்வதற்காக கொடுவாய் ஏ.எம்.சி மருத்துவமனை எதிரில் உள்ள நண்பரின் பஞ்சர் கடையில் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த ஆண்டிப்புதூரைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர், பிரதாப் பின் சாதியை கேட்டு கீழ் சாதிக்கா ரன் மேல் சாதிக்காரர் வந்தால் எழுந் திருக்க மாட்டாயா? என்று கேட்டு தகராறு செய்து இவரது இருசக் கர வாகன சாவியை பறித்துக் கொண்டார். இப்பிரச்சனையின் தொடர்ச்சி யாக மறுநாள் இருசக்கர வாக னத்தில் வந்த பிரதாப்பை நவீன் குமார் மற்றும் அவருடன் வந்த ஒரு கும்பல் வாகனத்தின் மீது மோதி அவரை பிடித்து காரில் கடத்திச் சென்றனர். கொடுவாய் ஓலப்பாளையம் அருகில் உள்ள ஒரு தென்னந்தோப் பிற்கு கொண்டு சென்று பிரதா பின் கை கால்களை கட்டி வைத்து கைகளாலும், தென்னை மட்டையா லும், இரும்பு கம்பியாலும் தாக்கி னர். பிரதாப்பின் நண்பர்கள் மூலம் இவை தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலா ளர்கள் கனகராஜ் உள்ளிட்டோர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, பிரதாப்பை மீட்டனர். இதையடுத்து அவிநாசிபா ளையம் காவல் நிலையத்தில் பிர தாப் வன்கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் நவீன் குமார், நந்தகுமார், அருண், ரமேஷ், மணி, சேனாதிபதி, சேகர் கதிரேசன் உள்ளிட்டோர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட் டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.