districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அதியமான் கோட்டத்தில் புனரமைப்பு பணிகள்

தருமபுரி, அக்.25- வள்ளல் அதியமான் கோட்டத்தில் ரூ.1 கோடி மதிப்பீட் டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் வள்ளல் அதியமான் கோட்டம் உள்ளது. இந்த கோட்டம் ரூ.1 கோடி  மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்ற  பேரவையின் மானிய கோரிக்கையின் போது தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, அதியமான் கோட்டத்தில் புனர மைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கோட் டத்தில் அதியமான் மற்றும் ஔவையார் சிலைகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணி, வட்டமான அமைப்பில் ஆத்திச் சூடி அமைக்கும் பணி, வர்ணம் பூசும் பணி, புல்தரை அமைக்கும் பணி, சிறுவர் பூங்கா அமைக்கும் பணி உள் ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். மேலும், இப்பணிகளை குறிப் பிட்ட காலத்திற்குள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுப்பணித்துறை செயற்பொறி யாளருக்கு ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறி யாளர் சிவக்குமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து  கொண்டனர்.

தேனீக்கள் கொட்டி தொழிலாளி மரணம்

உதகை, அக்.25- மஞ்சூர் அருகே மலைத்தேனீக்கள் கொட்டியதில் தொழி லாளி பரிதாபமாக உயிரிழந்தார், படுகாயமடைந்த மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே உள்ள சிவசக்தி நகரை  சேர்ந்தவர் மலையரசன் (50). இவருடைய மனைவி ராஜேஸ் வரி (38) இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். விவ சாய கூலி தொழிலாளர்களான மலையரசனும், ராஜேஸ்வரி யும் புதனன்று மஞ்சூர் அடுத்த எடக்காடு பகுதியில் தோட் டத்திற்கு வேலைக்கு சென்றனர். அங்கு வேலையில் இருந்த போது, அருகில் இருந்த தேன் கூட்டில் இருந்து பறந்து வந்த  மலைத்தேனீக்கள் ராஜேஸ்வரியை கொட்ட முயன்றது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மலையரசன் விரைந்து  சென்று மலை தேனீக்களை விரட்டினார். அப்போது மலையர சனையும், ராஜேஸ்வரியையும் தேனீக்கள் கொடூரமாக கொட்டி உள்ளது. இருவரும் ஓடி தோட்டத்திலிருந்து தப்பித்து  வெளியே வந்தனர். இதைத் தொடர்ந்து இருவரும் வேலையை நிறுத்தி விட்டு உடனடியாக வீட்டுக்கு சென்று உள்ளனர். அங்கு தேனீக்கள் கொட்டியதால் மயக்கம் ஏற்பட்டதால், உடனடி யாக அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச் சைக்காக மஞ்சூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மலையரசன் பரிதாபமாக உயிரி ழந்தார். இதற்கிடையே தேனீக்கள் கொட்டியதில் படுகாய மடைந்த ராஜேஸ்வரி சிகிச்சைக்காக மேல்ஊட்டி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதுகுறித்து மஞ்சூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மலைத் தேனீக்கள்  கொட்டி தொழிலாளி பலியான சம்பவம் இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தீ விபத்து

நாமக்கல், அக்.25- குமாரபாளையம் பவர் ஹவுஸ் அருகில், கொட்டப் பட்டிருந்த குப்பையில் தீப்பிடித்ததால் மின்மாற்றியை சுற்றி தீ பரவ துவங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் - சேலம் பிரதான  சாலையில் பவர் ஹவுஸ் அமைந்துள்ளது. இதன் வெளிப் புறத்தில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் மாற்றியை சுற்றிலும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குப்பை  கொட்டும் பகுதியாக பயன்படுத்தி வருகின்றனர். இந் நிலையில் செவ்வாயன்று இரவு குப்பையில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி, மின் மாற்றியை சுற்றிலும் தீ பற்றி எரிந்தது. இதனால் மின்மாற்றி முழுவதும் தீயில் எரிந்து மிகப் பெரிய விபத்து ஏற்படும்  நிலை உருவானது.  இதனையடுத்து அப்பகுதி மக்கள், குமாரபாளையம் தீய ணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படை யில், தீ விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த  தீயணைப்பு துறையினர்.  இதன்பின், சுமார் 2 மணி நேரத் திற்கு மேலாக போராடி தீயை அனைத்து மிகப்பெரிய விபத் தினை தடுத்தனர். மின்மாற்றியை சுற்றி ஏற்பட்ட தீ விபத்தி னால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாயை வேட்டையாடிய சிறுத்தை

உதகை, அக்.25- நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியில் வளர்ப்பு நாயை  சிறுத்தை வேட்டையாடி செல்லும் சிசிடிவி கேமரா பதிவு  சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இச்சம்பவம்  குடியிருப்பு வாசிகளை அச்சமடைய செய்துள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதி அடர்ந்த வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் இங்கு காட்டு யானை,  கரடி, காட்டு மாடு, சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்கு கள் உள்ளன. இந்நிலையில் பந்தலூர் இந்திரா நகர், எம்.ஜி.ஆர் நகர், நத்தம், ரிச்மண்ட் உள்ளிட்ட பகுதியில்  சமீப காலமாக சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி சென் றுள்ளது. மேலும் நத்தம் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் இரவு  நேரத்தில் நுழைந்த சிறுத்தை வீட்டில் வளர்க்கப்பட்ட வளர்ப்பு  நாயை வேட்டையாடி வாயில் இழுத்து சென்றுள்ளது. இந்த  காட்சி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா வில் பதிவான நிலையில் ,இந்த காட்சி தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி குடியிருப்பு வாசிகளை பெரிதும் அச்சமடைய செய்துள்ளது.

வனப்பகுதியில் அத்துமீறி நுழையும் சுற்றுலா பயணிகள்

 உதகை, அக்.25- வனப்பகுதியில் சுற்றுலாபயணிகள் அத்துமீறி நுழைவதாக புகார் எழுந் துள்ளது.  நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிமீ, பரப்பளவில் அமைந் துள்ளது. இதில் 321 சதுர கிமீ, பரப்பளவு உள்மண்டல பகுதியாகும். இப்பகுதியில் தான் புலி, யானை, சிறுத்தை, காட்டுமாடு,  மான்கள், பறவையினங்கள் உள்ளிட்ட வைகள் உள்ளன. மேலும் உள் மண்டலம் வழியாகத்தான் மசினகுடி – தெப்பக்காடு இடையேயான சாலை மற்றும் தொரப்பள்ளி முதல் கக்க னல்லா வரையிலான சாலையும் செல் கிறது. இதனால் இச்சாலை வழியாக பயணிக் கும்போது யானை, மான், மயில் உள்ளிட்ட  வனவிலங்குகளை அடிக்கடி காண முடியும்.  சில சமயங்களில் அரிதாக புலியை பார்க்க  முடியும். வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள  பகுதி என்பதால் இச்சாலைகளில் பயணிக் கும்போது சுற்றுலா பயணிகள் சாலையோ ரங்களில் வாகனங்களை நிறுத்தி இறங்கக் கூடாது. காப்பு காடுகளுக்குள் செல்லக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை செய்வதுடன், ஆங்காங்கு எச்சரிக்கை பல கைகள் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணி  மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகள், அத்துமீறி வனத்திற்குள் செல்கின்றனர். இத னால் வனவிலங்குகள் தாக்கக்கூடிய அபா யமும் நீடிக்கிறது. எனவே வனத்துறையினர் கண்காணிப்பு பணி மேற்கொண்டு சாலை யோரங்களில் வாகனங்களை நிறுத்தி வனத் திற்குள் நுழைவோர் மீது கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வ லர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்

நாமக்கல், அக்.25- நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட  ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, நாமக்கல் மாவட்டத்தில் அக்.27ஆம் தேதி யன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்படுகிறது. அதை தொடர்ந்து,  அக்.27 ஆம் முதல் டிச.9ஆம் தேதி வரை புதிய  வாக்காளர்கள் சேர்ப்பு முகாம் நடைபெறு கிறது. இம்முகாமில் பெயர்  சேர்ப்பு, முகவரி  மாற்றம், புகைப்பட மாற்றம் ஆகியவை நடை பெற உள்ளது. எனவே, இந்த வாக்காளர் பட்டியல் திருத்த பணி நவ. 4,5,18,19 ஆகிய நான்கு  நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங் களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.  நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுடைய இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளது. எனவே, 18 வயது பூர்த்தியடைந்த அனை வரும் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலங்கள் அல்லது வட்டாட்சியர் அலு வலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங் களுக்கு சென்று படிவம் 6-ல் விண்ணப்பிக் குமாறு தெரிவித்துள்ளார்.

மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை சேலம் சரக டிஐஜி நேரில் விசாரணை

தருமபுரி, அக்.25- தருமபுரியில் மூதாட்டியை கொலை செய்து, அவர் அணிந்திருந்த நகை கொள் ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து சேலம் சரக காவல் துறை துணைத்தலைவர் ராஜேஸ் வரி நேரில் விசாரணை செய்தார். தருமபுரி மாவட்டம், ஒடசல்பட்டி கூட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தமாள் (72). இவர் இளம் வயதிலேயே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு திருமணமாகாத நிலையில், நடக்க முடியாமல் வீட்டிலேயே தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கந்தம்மாளின் வீட்டிற்கு அவரது உறவினர் சிவனேஸ்வரன் என்பவர் மூதாட்டியை பார்க்க சென்றுள்ளார். அப்போது கந்தம் மாள் வீட்டில் இறந்து கிடந்துள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து கந்தம்மாளின் சகோதரர்  ஆறுமுகத்திற்கு அவர் தகவல் தெரிவித்ததை  தொடர்ந்து, தகவலறிந்து அங்கு வந்த கடத்தூர் போலீசார் நேரில் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது மூதாட்டி காதில் அணிந்திருந்த அரை சவரன் தங்க நகைக் காக அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என  தெரியவந்கதுள்ளது. இதுகுறித்து போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். முன்னதாக சம்பவ  இடத்திற்கு, சேலம் சரக காவல் துறை துணைத்தலைவர் ராஜேஸ்வரி நேரில் விசா ரணை மேற்கொண்டார்.

வீரபாண்டி மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

திருப்பூர், அக்.25- வீரபாண்டி பகுதிக்கு உட்பட்ட உதவி மின் பொறியாளர்  அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப  வேண்டும் என மங்கலம் கிராம நீரினைப் பயன்படுத்தும் பாசன  விவசாயிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. கோவை மண்டல மின் பகிர்மான தலைமை பொறியாள ரிடம் பாசன விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் சி.பொன்னு சாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது, திருப்பூா் வீர பாண்டி உபகோட்டத்துக்கு உட்பட்டு ஆண்டிபாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.  இந்த அலுவலக உதவி மின்பொறியாளர், 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முதலிபாளையம், காசிபாளையம் மின்  அலுவலகத்தை கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வருகிறார்.  இடுவம்பாளையம் மின்வாரிய அலுவலக உதவி பொறியா ளர், சின்னக்கரை உட்பட இன்னும் பிற மின் அலுவலகங்களை கூடுதலாகக் கவனிக்க வேண்டியுள்ளது. அதேபோல, முரு கம்பாளையம் உதவி மின் பொறியாளர், கரைபுதூா் துணை  மின் நிலையத்தை கூடுதலாகக் கவனித்து வருகிறார். ஒவ் வொரு மின்வாரிய அலுவலகங்களிலும் ஆயிரக்கணக்கான மின் இணைப்புகள் உள்ளன. கூடுதல் அலுவலகங்களைக் கவனிக்க வேண்டியுள்ளதால் மின்வாரிய அதிகாரிகளுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. மின் கணக்கீட்டாளர், பணம் வசூ லிப்போர் குறைவாகவே உள்ளனர். இதனால் மின் நுகர் வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, வீர பாண்டி உபகோட்டத்துக்கு உட்பட்ட உதவி மின்பொறியா ளர் அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

திருப்பூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நாளை மெகா மேளா

திருப்பூர், அக்.25- திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் அக்டோபர்  27 ஆம் தேதி மெகா மேளா நடைபெற உள்ளது. இதில்,  சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட உள் ளன. இது தொடர்பாக பிஎஸ்என்எல் கோவை வணிகபகுதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, உள் நாட்டிலேயே தயாரான தொழில்நுட்பத்தை கொண்டு பி.எஸ். என்.எல் விரைவில் 4ஜி சேவை அறிமுகம் செய்ய உள்ளது.  வரும் அக்டோபர் 27ஆம் தேதி திருப்பூர் மெயின் தொலை பேசி நிலையத்தில் மெகா மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. இந்த மேளாவில் சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட உள்ளன. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள  பில்களுக்கு ஒருமுறை கட்டணத்தீர்வு, அதிவேக பைபர்நெட்  புக்கிங், லேண்ட் லைன் டூ பைபர்நெட் மாற்றம், இலவச 4ஜி  சிம் அப்கிரடேசன், புதிய சிம் கார்டு, எம்என்பி மற்றும் இதர  கார்ப்பரேட் சேவைகளும் இந்த மேளாவில் வழங்கப்படும். அனைவரும் அசல் ஆதார் அட்டையுடன் வந்து இந்த மேளா வில் பங்கு பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட் டுள்ளது.

விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள்: உடுமலை வேளாண் துறை தகவல்

திருப்பூர், அக்.25- உடுமலை சுற்றுப்புற விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்கள் உரங்கள் மானிய விலையில் வேளாண்மை துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேளாண் துறை உதவி இயக்குநர் தேவி  கூறியதாவது, தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு  திட்டத்தின்கீழ் சான்று பெற்ற உளுந்து, சோளம், நிலக்க டலை விதைகளும், விதை கிராமத் திட்டத்தின் கீழ் நெல் விதை  50 சதவீத மானியத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.  25 சதவீத உரச் செலவை குறைக்கக்கூடிய ரைசோபியம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக் டீரியா, துத்தநாக சத்தை கரைத்துக் கொடுக்கும் உயிர் உரங் கள் 50 சதவீத மானியம் போக ரூ. 225-ல் பெற்றுக் கொள்ள லாம். உயிர் பூச்சிக்கொல்லிகள் மெட்டா ரைசியம் சூடோமோ னஸ், டிவிரிடி ஆகியவை 50 சதவீத மானியத்தில் உள்ளது.  எனவே மானிய விலையில் உள்ள நுண்ணூட்டக் கலவைகள்  ஒரு கிலோ வீதம் நெல் நுண்ணூட்டம் ரூ.57.04, கரும்பு நுண் ணூட்டம் ரூ. 64.94, தென்னை நுண்ணூட்டம் ரூ102.54, பயறு  நுண்ணூட்டம் ரூ.132.80, சிறுதானிய நுண்ணூட்டம் ரூ.101. 29-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேக்கு, மகாகனி, சவுக்கு, மலைவேம்பு போன்ற  மரக்கன்றுகள் வேளாண் காடுகள் திட்டத்தில் விவசாயிக ளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு எக்டேர் பரப்பளவில் வேம்பு  சாகுபடி செய்ய மானியம் ரூ. 21 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.  தென்னங்கன்றுகள் நெட்டை குட்டை ரகம் ரூ.125 க்கு விற்ப னைக்கு உள்ளது. பேட்டரி தெளிப்பான் மானிய விலையில்  வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் தங்கள் கைப்பேசியில் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் சம்பந்தப்பட்ட பகுதி  வேளாண்மை அலுவலரை 9344737991 என்ற எண்ணிலும், துணை வேளாண்மை அலுவலரை 7904087328 என்ற எண் ணிலும் தொடர்பு கொண்டு பயன் அடையலாம் என கூறி யுள்ளார்.

ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் வக்பு வாரியம் கையகப்படுத்தியது

ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் வக்பு வாரியம் கையகப்படுத்தியது திருப்பூர், அக். 25 - திருப்பூரில் 3 பள்ளிவாசல் உட்பட 100 கோடி ரூபாய் மதிப்பி லான சொத்துக்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழ்நாடு  வக்பு வாரியம் கையகப்படுத்தியது.  திருப்பூர் காதர் பேட்டையில் உள்ள அஹ்லே சுன்னத் ஜமாத் பள்ளிவாசலுக்கு உட்பட்ட மேலும் இரண்டு பள்ளிவா சல் மற்றும் 140 கடைகள் ஆகியவற்றை கடந்த 30 ஆண்டுக ளாக நிர்வகித்து வந்த சலீம் (எ) அப்துல் ரகுமான் என்பவர்  முறைகேட்டில் ஈடுபட்டதாக காதர்பேட்டை பூர்வீக ஜமாத் தார், தமிழ்நாடு வக்பு வாரியத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு  புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து வக்பு வாரியம் சலீமை நிர்வாக பொறுப்பில் இருந்து அகற்றியது. இதனை எதிர்த்து சலீம்  தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு  தள்ளுபடி செய்யப்பட்டது.  எனினும் தொடர்ந்து மேல்முறை யீடு செய்யப்பட்டதால் 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி  அன்று உச்சநீதிமன்றம் நிர்வாக பொறுப்பில் உள்ள சலீமை  அகற்றி வக்பு வாரியம் பள்ளிவாசல் மற்றும் அதற்கு சொந்த மான சொத்துக்களை கையகப்படுத்தி நிர்வாகம் செய்ய வேண்டும் என்ற தீர்ப்பை உறுதி செய்தது. இதனை தொடர்ந்து  போலீசார் பாதுகாப்புடன் வக்பு வாரிய அதிகாரிகள் சலீமி டம் இருந்து ரூ100 கோடி மதிப்புள்ள மூன்று பள்ளிவாசல் மற்றும் 140 கடைகள் உட்பட அசையா சொத்துக்களை கைய கப்படுத்தினர்.

தீபாவளி: கடைவீதிகளில் குவியும் மக்கள்

ஈரோடு, அக்.25- தீபாவளி பண்டிகை நவ.12 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது. இதை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாடைகளை தற் போது இருந்தே வாங்கி வருகின்றனர். மேலும், ஆயுத பூஜை  தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் ஜவுளி வாங்கு வதற்கு ஆர்வம் காட்டினர். மேலும், ஈரோட்டில் கூடிய ஜவுளிச் சந்தையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் கடைகள் அமைத்திருந்தனர். ஜவுளிகளை  வாங்குவதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்க ளில் இருந்தும் வியாபாரிகள் பலர் வந்திருந்தனர். அவர்கள் மொத்தமாக ஜவுளியை வாங்கி சென்றனர். ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா, ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி  வீதி, சென்டிரல் தியேட்டர் வளாகம், கனி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் ஜவுளி விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தீபாவளி பண்டிகைக்கு ஜவுளி எடுப்பதாக பொதுமக்களும் திரண்டனர். இதனால் மார்க்கெட் மட்டுமின்றி கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக, ஈரோடு நேதாஜி சாலை, ஆர்.கே.வி.ரோடு,  மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. பகலில் மக்கள் கூட்டம்  குறைவாகவே காணப்பட்டாலும், மாலையில் மக்கள் கூட்டம்  அதிகமாவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இத னால் ஈரோடு நகர காவல் துறையினரும், போக்குவரத்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

20 ஆடுகள் பலி: வனத்துறை விசாரணை

சேலம், அக்.25- சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூர் ஊராட்சி, காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் துரை ராஜ். அதேபகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர்கள் தங்க ளது நிலங்களில் 20க்கும் மேற்பட்ட ஆடுகளை பட்டியில் அடைத்து வளர்த்து வந்தனர். இந்நிலையில், அடையாளம் தெரியாத விலங்கு கடித்ததில், பட்டியில் அடைக்கப்பட்டி ருந்த 20க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன. இதுகுறித்து வனத்துறை, கால்நடை பராமரிப்பு துறை மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கால்நடை மருத்துவர்,  அங்கேயே ஆடுகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப் பட்டு அடக்கம் செய்யப்பட்டன. முதற்கட்ட விசாரணையில் வெறிநாய் கடித்து ஆடுகள் இறந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

ஈரோடு, அக்.25- பர்கூர் அருகே கர்நாடகா  மாநிலத்திற்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேசன் அரிசியை அதிகாரிகள் பறி முதல் செய்தனர். ஈரோடு மாவட்டம், அந்தி யூரை அடுத்த பர்கூர் தட் டக்கரை பகுதியிலிருந்து கர் நாடகா மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக ஈரோடு மாவட்ட குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தக வல் கிடைத்தது. அதன்பே ரில் காவல் ஆய்வாளர் பன் னீர்செல்வன் தலைமையில், உதவி ஆய்வாளர் மூர்த்தி உள்ளிட்ட போலீசார் தட்டக் கரை பேருந்து நிறுத்தம் பகுதியில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வேனை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை யிட்டனர். அதில் ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சரக்கு வேன் ஓட் டுநரிடம் போலீசார் விசா ரணை நடத்தினர். விசாரணையில் அவர் அந்தியூர் திருநீலகண்டர் வீதியைச் சேர்ந்த இளங்கோ (41) என்பதும், அவர் கர்நா டகா மாநிலத்திற்கு ரேசன் அரிசியை சரக்கு வேனில் கடத்தியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இளங் கோவை கைது செய்த போலீ சார், 16 மூட்டைகளில் இருந்த 800 கிலோ ரேசன் அரிசியை யும், கடத்தலுக்கு பயன்படுத் திய சரக்கு வேனையும் பறி முதல் செய்தனர். தொடர்ந்து குடிமைப்பொருள் அதிகாரி கள் பர்கூர் பகுதியில் தொடர் வாகன சோதனையில் ஈடு பட்டு வருகின்றனர்.

இன்று மின்தடை

ஈரோடு, அக்.25- ஈங்கூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மூலக் கரை, வெள்ளோடு, கவுண் டச்சிபாளையம், ஈங்கூர், தோப்புபாளையம், பெருந் துறை ஆர்எஸ், பெருந்துறை ஹவுசிங் யூனிட் உள்ளிட்ட  பகுதிகளில் வியாழனன்று (இன்று) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.  தருமபுரி காரிமங்கலம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட அண்ணாமலை அள்ளி, கும் பாரஅள்ளி, சின்ன கொல்லப் பட்டி, பெரிய கொல்லப் பட்டி, கொல்லுப்பட்டி, காட் டூர், தும்பலஅள்ளி, ஏ.சப்பா ணிப்பட்டி, கெண்டிகான அள்ளி, திண்டல், பந்தார அள்ளி, எட்டியானூர், கோவி லூர், கே. மோட்டூர், எச்சன அள்ளி, கீரிக்கொட்டாய், மன் னன்கொட்டாய் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வியாழ னன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் சாரம் நிறுத்தப்படுகிறது.