districts

img

நீர்வழித்தடங்களை ஆக்கிரமிக்கும் ரியல்எஸ்டேட் துறையினர்

உடுமலை, ஜன. 2- இயற்கையாக உள்ள நீர்வழித்த டங்களை அழித்து, வீட்டு மனைக ளுக்கு சாலை மற்றும் பூங்கா அமைக் கும் ரியல்எஸ்டேட் துறையின் நடவ டிக்கையால், மழைநீர் குடியிருப்பு பகுதிக்கு வரும் அபயம் ஏற்பட்டு உள்ளது. உடுமலை மற்றும் மடத்துக்கு ளத்தில் முக்கிய தொழிலாக விவசா யம் மற்றும் கால்நடை வளர்ப்பு  பிரதானமாக உள்ளது. இந்நிலை யில், ரியல்எஸ்டேட் தொழில் வளர்ச் சியால் விளைநிலங்கள் மற்றும்  மேய்ச்சல் நிலங்கள் வீட்டுமனைக ளாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த  பகுதியில் ரியல்எஸ்டேட் பெரிய நிறு வனங்கள் நேரிடியாக வீட்டு மனை விற்பணையில் ஈடுபட்டு வரு கின்றனர். இதனால், சட்டவிதிகளை மதிக்காமலும், அரசு நிர்வாகத்தை கையில் போட்டுக்கொண்டும், விளைநிலங்களை வீட்டுமனைக ளாக பிரிக்கப்படும்போது, அந்த பகு தியில் இயற்கையாக இருக்கும்  நீர்வழித்தடங்களை அழித்து சாலை கள், பூங்கா என அமைக்கப்படுகிறது. இதற்கு வருவாய்த்துறையில் உள்ள சில அதிகாரிகளும் விலை  போய்வருவதாக சமூக செயற்பாட் டாளர்கள் குற்றம் சாட்டி வருகின்ற னர். இதுகுறித்து சமூக செயற்பாட்டா ளர்கள் மற்றும் குளங்கள் பாது காப்பு இயக்கத்தினர் கூறுகையில்,  இயற்கையாக இருக்கும் நீர்வழித்த டங்கள் அனைத்தும் அருகில் இருக் கும் குளங்களுக்கு செல்லும் வகை யில் அக்காலத்திலேயே வடிவமைக் கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரியல்  எஸ்டேட் நிறுவனங்கள் தங்களின் சுயநலத்திற்காக அழித்து வருகின்ற னர். இதனால், பெரு மழை பெய் தால், சென்னை, நெல்லை, தூத்துக் குடி போல மழைநீர் செல்ல வழியில் லாமல் குடியிருப்பு பகுதிக்குள் வெள் ளம் புகும் ஆபத்துள்ளது. வீட்டு மனைகளை விற்பணை செய்ய அரசின் அனுமதி பெற பல கட்டுப்பா டுகள் உள்ளபோதும், முறையாக ஆய்வு செய்யாமல் அனுமதி வழங் கப்படுகின்றது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மீண்டும் ஆய்வு செய்து  ஆக்கிரப்பு செய்யப்பட்ட நீர்வழித்த டங்களை மீட்க வேண்டும். இல்லை யென்றால், பெரு மழை போன்ற பேரி டர் போன்ற காலங்களில் மழை நீர் குடி யிருப்பு பகுதிகளுக்கு சென்று பெரும் சேதங்களை உருவாக்கும். இதனை தடுக்க உரிய தலையீட்டை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.