districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மாதர் சங்கம் மற்றும் அனைத்து அமைப்புகள் நடத்தும் பேரணி, கருத்தரங்கம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் அனைத்து அமைப் புகள் சார்பில் 08.03.2023 புதன்கிழமை மாலை 3.00  மணிக்கு நொய்யல் நதிக்கரையில் பேரணி நடைபெறு கிறது இதைதொடர்ந்து, கே.ஆர்.சி.சிட்டி சென்டரில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

திருப்பூர் பற்றி வதந்தி பரப்பியவர்  தெலுங்கானாவில் கைது

திருப்பூர், மார்ச் 7 – புலம்பெயர்ந்த வட மாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்கு தல் நடத்துவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய  பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ்குமார் என்பவரை திருப் பூர் மாநகர காவல் துறையினர் தெலுங்கானா மாநிலத்தில் கைது செய்தனர். சமீப நாட்களாக புலம் பெயர்ந்த வட மாநிலத் தொழிலாளர் கள் மீது தாக்குதல் நடத்துவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, மாந கர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவில் சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் ஐ.சொர்ணவள்ளி தலைமை யில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் சமூக வலைதளங்களைக் கண்காணித்து, முக நூலில் சிபிஎல் மீடியா என்ற கணக்கில் ரூபேஷ்குமார் என்பவர்  போலியான வீடியோவை பதிவேற்றம் செய்து வதந்தி  பரப்பியதைக் கண்டுபிடித்தனர். எனவே கடந்த ஞாயிறன்று,  இவர் மீது 153 ஏ, 505 (2) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய் யப்பட்டது. இதையடுத்து ரூபேஷ்குமாரை கைது செய்வ தற்காக சார்பு ஆய்வாளர் கே.ரஜினிகாந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தெலுங்கானா மாநிலம், வன பார்த்தி மாவட்டம் சின்னகுண்டபள்ளி கிராமத்தில் ரூபேஷ்கு மாரை (23) தனிப்படை காவலர்கள் கைது செய்தனர்.  அவர் பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரன், பன்கட்டி பகுதியைச்  சேர்ந்த சிவசங்கர் ராம் என்பவரின் மகன் ஆவார். ரூபேஷ்கு மாரை திருப்பூருக்கு கொண்டு வந்து திருப்பூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 3 இன் முன்பாக ஆஜர்ப்படுத்தி நீதி மன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இடமாற்றம் இல்லை: சிபிஎம் கேள்விக்கு ஒரு மாதம் கழித்து மின்வாரியம் பதில்

திருப்பூர், மார்ச் 7 - உடுமலைப்பேட்டை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை  பொறியாளர் அலுவலக இடமாற்றம் குறித்து மார்க்சிஸ்ட்  கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன் கேள்வி எழுப்பியதற்கு, ஒரு மாதம் கழித்து மின்வாரிய  மேற்பார்வைப் பொறியாளர் கொ.தி.சந்திரசேகரன் பதில் அளித்திருக்கிறார். கடந்த ஜனவரி 28 அன்று சிபிஎம் சார்பில் எழுதிய கடிதத் திற்கு மார்ச் 3ஆம் தேதி பதில் எழுதப்பட்டுள்ளது. இதில், உடு மலைப்பேட்டையில் இயங்கி வரும் உடுமலை மின் பகிர் மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை பொள் ளாச்சிக்கு மாற்றம் செய்ய இதுவரை எவ்வித உத்தரவும் பெறப்படவோ அல்லது இந்த அலுவலகத்தில் இருந்து எவ் வித முன்மொழிவோ அனுப்பப்படவில்லை என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

ரூ. 1.23 கோடிக்கு பருத்தி ஏலம்

தாராபுரம், மார்ச் 7- மூலனூர் ஒழுங்குமுறை  விற்பனை கூடத்தில் சுமார்  ரூ. 1.23 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. திருப்பூர் மாவட்டம்,  மூலனூர் ஒழுங்குமுறை விற் பனைகூட முதுநிலை செய லாளர் ஆர்.பாலச்சந்திரன்  வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது, மூலனூர் ஒழுங்குமுறை விற் பனைக்கூடத்தில் பருத்தி  விற்பனை மறைமுக ஏலம்  நடைபெற்றது. அதிக பட்ச விலையாக குவிண் டால் ஒன்றிற்கு ரூ. 8 ஆயி ரத்து 270 க்கும் குறைந்தபட்ச  விலையாக ரூ. 6 ஆயிரத்து  800 க்கும் சராசரி விலையாக  ரூ. 7 ஆயிரத்து 400க்கும் விலை போனது. மொத்தம் 5255 மூட்டைகள் 1 ஆயிரத்து 671 குவிண்டால் பருத்தி  ரூ. 1 கோடியே 22 லட்சத்து  96 ஆயிரத்து 760க்கு விற் பனையானது. இந்த ஏலத் தில் 16 வணிகர்கள் பங்கேற் றனர். ஏலத்திற்கான ஏற்பா டுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்தி ருந்தார்.

தாராபுரத்தில் இன்று மின் குறைதீர்க்கும் நாள் முகாம்

தாராபுரம், மார்ச் 7 – தாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் இன்று மின் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பல்லடம் மின்பகிர்மான வட் டம், தாராபுரம் கோட்டத்திற் குட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் புதனன்று  (இன்று) மேற்பார்வை பொறி யாளர் பல்லடம் மின்பகிர் மான வட்டம் பல்லடம் அவர் களின் தலைமையில் நடை பெற உள்ளது. தாராபுரம் தள வாய்பட்டிணம் சாலையில் உள்ள மின்வாரிய கோட்டப் பொறியாளர் அலுவலகத் தில் காலை 11 மணி முதல் 2  மணி வரை நடைபெற உள்ள  கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெ றுமாறு செயற்பொறியாளர் வ.பாலன் தெரிவித்துள்ளார்.

வதந்தி பரப்பிய பாஜக பிரமுகர் கைது செய்ய தொழிற்சங்கத்தினர் மனு

திருப்பூர், மார்ச் 7 - உ.பி. மாநில பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த செய்தித்  தொடர்பாளர் பிரசாந்த் உமாராவை கைது செய்ய அனைத்து  தொழிற்சங்க நிர்வாகிகள் மாநகர காவல் ஆணையர் அலுவல கத்தில் மனு அளித்தனர். திருப்பூரில் லட்சக்கணக்கான மக்கள்  பின்னாலாடை மற் றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி கொண்டு  ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் சூழ்நிலையில் கடந்த சில நாட் களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரசாந்த்  உமாராவ் என்பவர், தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலா ளர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுவதாகவும், அவர்க ளுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றும் உண் மைக்கு மாறான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி னார். வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற பொய்யான வீடியோக்களும் பதிவிட்டார். எனவே  அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்  என சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், எம்எல்எப், ஐஎன்டியூசி, எச் எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மாநகர காவல்  ஆணையரகத்தில் செவ்வாயன்று மனு அளித்தனர்.