கோவை, ஜன.16- தமிழர் கலாச்சார அறக் கட்டளை சார்பில் பொள் ளாச்சியில் ரேக்ளா மாட்டு வண்டி பந்தயம் நடைபெற் றது. தமிழர் திருநாளாம் பொங் கல் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டம், பொள் ளாச்சி - வடக்கிபாளையம் சாலையில் நாட்டு இன காளை மாடுகளுக்கான ரேக்ளா மாட்டு வண்டி போட்டிகள் வியாழனன்று நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாட்டு இன காலைகளுடன் வந்த போட்டி யாளர்கள் பங்கேற்றனர். இந்த போட்டி யானது இரண்டு பல், நான்கு பல் என வயது அடிப்படையிலும், 200 மீட்டர், 300 மீட்டர் எனும் தூரத்தின் அடிப்படையிலும் நடத்தப்பட்டது. இந்த ரேக்ளா போட்டியில் காங்கேயம் இன காளைகள், கர்நாடகா லம்பாடி காளைகள் என 1000 காளைகள் போட்டியில் பங்கேற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் காளைகளுக்கு முதல் பரி சாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 50,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 30,000 ரூபாயும், வெற்றி பெரும் காளைகளுக்கு தங் கம் - வெள்ளி நாணயங்கள் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. மேலும், கிழக்கு மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக் கட்டு போட்டிகளை எப்படி விதிமுறைகள் கொண்டு அரசு ஏற்று நடத்துகிறதோ அதே போல மேற்கு மாவட்டங்களில் நடக்கும் ரேக்ளா மாட்டு வண்டி போட்டிகளையும் அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.