சேலம், பிப்.4- திருமணிமுத்தாற்றின் ராஜ வாய்க் காலை ஆக்கிரமிபிலிருந்து மீட்க வேண் டும் என வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலி ருந்து திருமணிமுத்தாறு செல்லும் பிர தான வாய்க்காலாக ராஜவாய்க்கால் திகழ்கிறது. இந்நிலையில், மூக்கனேரி பகுதியில் உள்ள ராஜவாய்க்கால் தனி யாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள தால் அப்பகுதியில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி நிர் வாகத்திடம் பலமுறை முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், ஞாயிறன்று போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவலறிந்து நிகழ்வி டத்திற்கு வந்த மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி மற்றும் அதிகாரி கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து தற்காலிகமாக ராஜ வாய்க்காலில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் செல்ல வழிவகை செய்தனர். இதைய டுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக் கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.