districts

img

மார்க்சிஸ்ட் கட்சியின் அந்தியூர் தாலுகா செயலாளராக ஆர்.முருகேசன் தேர்வு

ஈரோடு, அக்.8- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அந்தியூர் தாலுகா செயலாளராக ஆர்.முருகேசன் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா 4 ஆவது மாநாடு அந்தியூரில் தோழர் செல் வம் நினைவரங்கில் செவ்வாயன்று நடை பெற்றது. எஸ்.செபாஸ்டியன், கே.குரு சாமி மற்றும் சாவித்திரி ஆகியோர் தலைமை வகித்தனர். தாலுகா கமிட்டி உறுப்பினர் கந்த சாமி மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். எஸ்.கீதா அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.வி. மாரிமுத்து வரவேற்றார். மாவட்டச் செயலா ளர் ஆர்.ரகுராமன் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். தாலுகாச் செயலா ளர் ஆர்.முருகேசன் வேலை அறிக்கையை முன்வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஆர்.கோமதி வாழ்த்தி பேசினார். அந்தியூர் வட்டாரத்தில் இருக்கும் ஏரி, குளங்களை  நிரப்ப மேட்டூர்- பவானிசா கர் அணைகளின் உபரி நீரை  கொண்டு வரும் திட்டத்தை  உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அந்தியூர் வட்டா ரத்தில் தினசரி பாதுகாக் கப்பட்ட குடிநீர் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.  சிறு தொழில், கைத்தறி, விசைத்தறி, சிறு வணி கர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைநிலங்களை, பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பர்கூர் மலையில் வசிக்கும் மலையாளிக ளுக்கு சாதி சான்றிதழ் உடனடியாக வழங்க  வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டின் முடிவில், 13 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. புதிய  கமிட்டியின் செயலாளராக ஆர்.முருகேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.