அவிநாசி, நவ.11 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்ட குடியேறும் போராட்டத்தில் அரசு அதிகாரிகள் எழுதிக் கொடுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாதி வேலைகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. மீதி வேலைகள் எப்போது தீர்க்கப்படும் என அவினாசி ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டத் தில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒன்றியக் கவுன்சிலர் பி.முத்துசாமி கேள்வி எழுப்பினார். அவிநாசி ஊராட்சி ஒன்றி யக்குழுக் கூட்டம், பொறுப்பு ஒன் றிய பெருந்தலைவர் பிரசாந்த் தலைமையிலும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ்குமார், விஜ யகுமார் முன்னிலையிலும் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் கவுன்சிலர் முத்துசாமி பேசுகை யில், வஞ்சிபாளையம் பகுதி சிபி எம் கிளைகள் சார்பில் சில நாட்க ளுக்கு முன்பு பல்வேறு கோரிக்கை களை முன்வைத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடியே றும் போராட்டம் நடத்தினோம், இதில் முன்வைத்த கோரிக்கைக ளில் ஒரு பகுதி கோரிக்கைகள் மட் டுமே நிறைவேறியுள்ளது மீத முள்ள கோரிக்கைகள் நிறை வேற்றப்படவில்லை, தாங்கள் எழு திக் கொடுத்த 25 நாள் கெடுவில் வெறும் நான்கு நாட்கள் மட்டுமே, உள்ளது. மீதி உள்ள வேலைகளை எப்போது செய்து முடிப்பீர்கள்? அத்து டன் பொதுமக்கள் எங்களிடம் கேள்வி கேட்கிறார்கள். விரை வில் வேலைகளை தீர்க்கப்பட வேண்டும். மங்கலம் சாலையி லிருந்து வஞ்சிபாளையம் பகுதி வரை 12 பேரிகார்டுகள் வைக்கப்பட் டுள்ளன. இதில் குறிப்பாக கருணை பாளையம் பிரிவு அருகில் தனியார் பள்ளி வெள்ளை கோடு வரை பேரி காடுகளை வைத்து மறைத்துள் ளனர். அந்த இடத்தில், எந்த வாக னம் சென்றாலும் நின்று செல்ல வேண்டிய அவலநிலை ஏற்படுகி றது. இப்பள்ளிக்கு மட்டும் நான்கு பேரிகார்டுகள் வைக்க எப்படி சிறப்பு ஏற்பாடு? இதற்கு அனுமதி வழங்கிய காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை பதில் தர வேண்டும். பள்ளி விடுமுறை நாட்க ளிலும் கூட இந்த பேரிகார்டுகள் அப் படியே இருக்கின்றன. இதுகு றித்து பலமுறை தெரிவித்து விட் டேன் எந்தவித நடவடிக்கையும் இல்லை, இதனை தீர்க்க வேண் டும், வஞ்சிபாளையம் மேம்பாலத் தில் இருந்து கீழே இறங்கும் போது சில மாதங்களுக்கு முன்பு, சாலை யைக் கடந்து குடிநீர் குழாய் பதிக் கும் பணி நடைபெற்றது. சாலையை சிதிலம் ஏற்பட்ட பணிக்காக உரிய தொகையும் நெடுஞ்சாலை துறைக்கு கட்டப்பட்டுள்ளது, இருப் பினும் நெடுஞ்சாலைத்துறை சாலையை இதுவரை சரி வர சீர மைக்காத காரணத்தால், டிப்பர் லாரி கவிழ்ந்து, எதிரே இருசக்கர வாக னத்தில் வந்த இரண்டு நபர்கள் பலி யானார்கள், இது ஒரு அலட்சியம், உடனடியாக சீரமைத்து தர வேண் டும், கணியாம்பூண்டி செந்தூர் நகர் பகுதியில் மேல்நிலைத் தொட்டி கட் டுவதில் பிரச்சனை நீடித்து வருகி றது ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அழைத்து விரைவில் சுமூகமான தீர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து திமுக வைச் சேர்ந்த கார்த்திகேயன் பேசு கையில் ஊராட்சி ஒன்றிய நிர்வா கத்தில் செலவு கணக்குகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது, வரவு கணக்குகள் வைக்கவில்லை இதனை வைக்க வேண்டும், ஐந்து வருடங்களில் ஒரு ஒன்றியக் கவுன் சிலருக்கு எத்தனை வேலைகள் நடைபெற்றுள்ளது என்பதைப் பற்றி பட்டியல் கேட்கப்பட்டது இது வரை கொடுக்கப்படவில்லை, விரைவில் கொடுக்க வேண்டும், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில், எத்தனை பயனாளிகளுக்கு ஒதுக் கப்பட்டுள்ளது அதனைப் பற்றிய விபரங்களும் தெரியப்படுத்த வேண்டும், எந்த அடிப்படையில் பயனாளிகளுக்கு வீடு கட்ட வழங்கப் பட்டுள்ளது என்பதையும் தெரியப்ப டுத்த வேண்டும், பழங்கரை ஊராட் சியில் நிரந்தரமாக ஊராட்சி செய லாளரை நியமிக்க வேண்டும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அதி முகவை சேர்ந்த அய்யாவு பேசு கையில் வடுகபாளையம் ஊராட்சி யில் கலைஞர் வீடு கட்டும் திட்டத் தில் பயனாளி ஒருவருக்கு வீடு கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும், வடு கபாளையம், துலுக்கமுத்தூர் ஊராட்சிகளில் எலந்த குட்டை முதல், மணிகாரன் குட்டை வரையி லும், போயேரி முதல் சாலைபாளை யம் நால்ரோடு வரையிலும் தார் சாலை அமைக்க வேண்டும், காட்டு வளவு, சின்ன ஓலப்பாளையம், கல்லுமடை குட்டை உள்ளிட்ட பகுதியில் 30,000 லிட்டர் மேல்நி லைத் தொட்டி அமைத்துக் கொடுக்க வேண்டும், குப்பாண்ட பாளையம் ஏடி காலனி பகுதியில் 30, 000 லிட்டர் மேல்நிலைத் தொட்டி கட்ட ஒப்பந்தம் புள்ளி பெறப் பட்டும் பணிகள் நடைபெறாமல் உள்ளது உடனடியாக பணியை துவங்க வேண்டும், துலுக்கமுத் தூரில் இருந்து ஊஞ்சபாளையம் ரேஷன் கடை வரை சாலையினை புதுப்பித்து தரவேண்டும், நல்லகட் டிபாளையம் ஏடி காலனி பகு தியைச் சேர்ந்த மக்களுக்கு மயா னத்திற்கு மாற்று இடம் வழங்கி ஏற் பாடு செய்ய வேண்டும் என தெரி வித்தார். வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் ரமேஷ்குமார், விஜயகுமார் இந்த கோரிக்கைகள் விரைவில் தீர்க்கப்படும் என தெரிவித்தனர்.