திருப்பூர், ஏப்.27- திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கே.என்.புரம் என்ற இடத்தில் சாலையோர சாக்கடையில் சிக்கித்தவித்த ஆறு நாய்க்குட்டிகளை பல்லடம் தீயணைப்பு படையினர் மீட்டனர். கடந்த 15 நாட்களாக இந்த நாய்க்குட்டிகள் சாக்கடை யில் சிக்கித் தவித்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். மீட்புப் படையைச் சேர்ந்த பல்லடம் நிலைய அலுவலர் ம.முத்துக்கு மாரசாமி தலைமையில், ச.தண்டபாணி, ச.லோகநாதன், த. முத்தையா, க.செந்தில்பிரகாஷ், பூ.ஸ்டீபன் ஆகியோர் சாக்க டையில் இருந்து நாய்க்குட்டிகளை மீட்டு அதன் தாயுடன் சேர்த்தனர். தீயணைப்பு படையினரின் இந்நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.