districts

img

தனியார் நலனுக்காக 100 வருடத்திற்கு மேலான குடியிருப்புகளை இடிப்பதா?

நாமக்கல், ஜூலை 11-  நூறு வருடத்திற்கு மேலாக அர சிற்கு தேவைப்பாடாத புறம் போக்கு நிலத்தில் குடியிருந்து வரும் நிலையில் தனியார் நலனுக் காக நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி அப்பாவி உழைக்கும் மக் களை அப்புறப்படுத்தும் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தும், கண் ணிர் மல்க ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர்.  பரமத்தி வேலூர்  ஜேடர்பாளை யத்தில் சர்வே எண் 266. 267 என்  நிலத்தில் பனைமரம் ஏறும் தொழி லாளர்கள், அருந்ததியர், பிற்படுத் தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதுகுறித்து  பாதிப்பிற்குள்ளாகும் மக்கள் கூறு கையில், கடந்த நூறாண்டுகளுக்கு முன்பு, இந்த பகுதியை தார் சாலைகளுக்காக ஜல்லிகள் வைக் கும் இடமாக பயன்படுத்தி வந்தனர். தார் சாலைகள் எல்லாம் அமைத்த பிறகு அந்த இடம் காலியாக இருந் தது. அப்போது குடியிருக்க வீடு  இல்லாமல் இருந்த எங்கள் முன் னோர்கள் இங்கு வீடு கட்டி குடி  ஏறினார்கள். நாங்கள் நான்கு தலை முறையாக சுமார் 100 ஆண்டுக ளுக்கு மேலாக இந்த இடத்தில் குடி யிருந்து வருகின்றோம். சமீபத்திலேயே இந்த இடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்த மான இடம் என தெரியவந்தது.  மாநில நெடுஞ்சாலை துறைக்கு தற்போது இந்த இடம் எவ்வகை யிலும் தேவையாக இல்லை. நெடுஞ்சாலைத்துறையும் இது குறித்து அறிவிப்பு கொடுக்கவே, வழக்கு கொடுக்கவோ இல்லை. இந்நிலையில், பொதுமக்கள் குடி யிருப்பு அருகில் வசித்து வரும்  ராஜேந்திரன், இந்த பகுதியில் ஒரு பகுதி இடத்தை ஆக்கிரமித்ததோடு மொத்த நிலங்களையும் அபக ரிக்க முயற்சித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 2008 ஆம் ஆண்டு  வழக்கு தாக்கல் செய்து தீர்ப்பை  தனக்கு சாதகமாக பெற்றுள்ளார்.

இதனால், குடியிருக்கும் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதாக, வரு வாய்த் துறையினர் மூலம் எங்க ளுக்கு தெரிவிக்கப்பட்டது. இத னால் எங்களின் 800 குடியிருப்புகள் கேள்விக்குறியாக மாறியுள்ளது. எளிய மக்களின் நிலை அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இப்பகுதி மக்களை அப்புறப் படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் திங்களன்று சம் பந்தப்பட்ட ஊருக்கு வருவாய் துறையினர் ஜேசிபியுடன் எந்திரங் களை எடுத்து வந்து வீடுகளை இடிக் கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பதறிய அப்பகுதி சேர்ந்த பெண் கள் திங்கள்று மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் கோரிக்கை மனு  அளித்தனர். இதற்கு எவ்வித பதி லும் கூறாமல் மனுவை பெற்றுக் கொண்டு விசாரிக்கிறோம் என்று  கூறியுள்ளனர். இதனால் பொது மக்கள் ஆட்சியர் வாளாகத்தில்  வெளியே வந்து அழுது புலம்பி படிகட்டில் அமர்ந்து போகமாட் டோம் என்றனர். இதனையடுத்து காவல்துறையினர் அப்புறப்படுத் திட முயற்சி செய்தனர். இதனிடையே சம்பந்தப்பட்ட ஊரில் குடியிருப்புகளை அகற்றும் பணியில் வருவாய்துறை  ஈடுபட்ட போது அப்பகுதியைச் சேர்ந்த  பெண்மணி ஒருவர் மயக்கமடைந் தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற் பட்டது. இதனையடுத்து நான்கு வீடு களை மட்டும் தரைமட்டமாக இடித் துவிட்டு சென்றனர்.