திருப்பூர், பிப்.17- அவிநாசி அருகே ஆயிக்கவுண்டம்பா ளையத்தில் சேதப்படுத்தப்பட்ட பழமை யான தடுப்பணையை, புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட ஆயிக்கவுண்டம்பாளையத்தில் நீராதாரக் குட்டை உள்ளது. இதில் நீர்த்தேக்கத்துக் குக்காக 50 ஆண்டுகளுக்கு முன்பு கற்க ளால் அமைக்கப்பட்ட தடுப்பணையும் உள்ளது. இந்த தடுப்பணையின் கற்களை மராமத்து பணிக்காக அகற்றியுள்ளனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரி வித்ததால், தடுப்பணையில் கற்கள் அகற் றும் பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 100 ஆண்டுகள் ஆனாலும், பெரிய வெள்ளம் வந்தாலும் தடுப்பணையின் உறுதிதன்மை மாறாது. இதற்கிடையில் மராமத்து பணிகள் என்ற பெயரில், தடுப்பணையில் இருந்த பழமை யான கற்களை 4 வரிகளுக்கும் மேல் அகற்றி உயரத்தை குறைத்துவிட்டனர். பொதுமக் கள் தடுத்ததால், கற்களை அப்படியே விட்டுச் சென்றனர். தற்போது அகற்றப்பட்ட கற்க ளையும் எடுத்துச் சென்றுவிட்டனர். அத்திக் கடவுத் திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், உடனடியாக அகற்றப்பட்ட பழமையான கற் களைக் கொண்டு தடுப்பணையின் தன்மை மாறாமல், மீண்டும் அமைக்க வேண்டும் என, என்றனர்.