தருமபுரி, ஜூலை 10- நல்லம்பள்ளி அருகே சேதமடைந்து காணப்படும் மாக்கனூர் – ஆண்டியூர் சாலையை விரைந்து சீரமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பேடரஅள்ளி ஊராட்சிக்குட் பட்ட பல்வேறு கிராமங்களுக்கு பாப்பா ரப்பட்டி, பாலக்கோடு உள்ளிட்ட நகரங் களில் இருந்து செல்வதற்கு, மாக்கனூர் முதல் ஆண்டியூர் வரை சுமார் ஒரு கி.மீ நீள சாலை உள்ளது. ஆனால், இச் சாலை கடந்த பத்து ஆண்டுகளாக சீர மைக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இச்சாலையை பயன்படுத் தும் மாக்கனூர், கள்ளிக்கோட்டை, பேடர அள்ளி, மூக்கனள்ளி, ஆண்டியூர், சோமனஅள்ளி, சோளப்பாடி, தளவாய் அள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்ற னர். சாலை சேதமடைந்து காணப்படுவ தால், பேருந்துகள் சென்றுவர மிகவும் சிரமமாக உள்ளது. அதுபோல் பள்ளி, கல்லூரி பேருந்துகள், பயணிகள் ஆட் டோக்கள் மற்றும் நான்கு சக்கர, இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மிக வும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகி பி.ஜெகநாதன் கூறு கையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இச்சாலை சீரமைக்கப்படாமல் குண் டும், குழியுமாக உள்ளது. எனவே, சாலையை சீரமைத்து நெடுஞ்சாலைத் துறை பராமரிப்புக்கு ஒப்படைக்க வேண் டும், என்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் நடைபெற்ற கூட்டத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த சாலையை மேம்ப டுத்தி நெடுஞ்சாலை துறையிடம் ஒப்ப டைப்பது என தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. மூன்று ஆண்டுகளாகியும் இந்த தீர்மானத்தின் அடிப்படையில் சாலை சீரமைக்கப்படவில்லை. நெடுஞ் சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட வில்லை என பேடரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த நல்லம்பள்ளி ஊராட்சி ஒன் றியக் கவுன்சிலர் கோவிந்தராஜ் தெரி வித்தார். 10க்கும் மேற்பட்ட கிராம மக் கள் பயன்படுத்தும் இந்த சாலையை விரைவில் சீரமைத்து, நெடுஞ்சாலைத் துறையினர் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நல்லம் பள்ளி மற்றும் பென்னாகரம் ஒன்றியத் துக்குட்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.