districts

img

அங்கன்வாடி மையத்திற்கு நிரந்தர இடம் ஒதுக்க பொதுமக்கள் கோரிக்கை

அவிநாசி, செப்.9 - அவிநாசி கஸ்தூரிபாய் வீதியில்  உள்ள அரசு தொடக்கப் பள்ளியில்  செயல்பட்டு வரும்  அங்கன்வாடி மையத்திற்கு நிரந்தர இடம் ஒதுக்கி  புதிய கட்டிடம் கட்டி தரக் கோரி திங்க ளன்று வட்டார வளர்ச்சி அலுவலரி டம் பொதுமக்கள் கோரிக்கை வைத்த னர். அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட கஸ்தூரிபாய் வீதியில் அரசு தொடக் கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்திற்குள் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. ஒரு ஆண்டுக்கு முன்பு பள்ளி நிர்வா கம் அங்கன்வாடி மையத்தை வேறு  இடத்திற்கு மாற்றக் கோரி அங்கன் வாடி ஆசிரியரிடம் கூறியிருந்தனர். அங்கன்வாடி ஆசிரியர் இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்ததை அடுத்து,  வட்டார வளர்ச்சி அலுவலர் பள்ளி நிர்வாகத் திடம்  பேச்சுவார்த்தை நடத்தி அங் கன்வாடி மையம் அங்கேயே செயல் படும்படி பேசி முடிக்கப்பட்டது. இந்நிலையில், அங்கன்வாடி மையத்தை உடனடியாக வேறு இடத் திற்கு மாற்றக் கோரி பள்ளி நிர்வா கம் மீண்டும் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கன்வாடியில் படிக் கின்ற குழந்தைகளின் பெற்றோர் கள், ஒன்றியக் கவுன்சிலர் முத்துசாமி,  பேரூராட்சி கவுன்சிலர் தேவி, கனக ராஜ், ரமணி உள்ளிட்டோர் இப்பி ரச்சனை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமாரிடம் கூறி னர். இதுகுறித்து உயர் அதிகாரிக ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உயர் அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திடம் அங்கன்வாடி மையத்தை அங்கேயே செயல்பட அனுமதிக்கும்படி கூறியுள்ளனர். மேலும், கூடிய விரைவில் அங்கன் வாடி மையத்துக்கு நிரந்தரம் இடம்  ஒதுக்கி கட்டிடம் கட்டித் தருவதாக கூறியுள்ளனர்.