உடுமலை, ஏப். 15- மடத்துக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் பொது மக்கள் பயன்ப டுத்த, விதிப்படி பொழுதுபோக்கு பூங்கா அமைக்க ஒதுக்கிய இடத்தில், பேரூராட் சியின் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளார்கள். மடத்துக்குளம் பேரூராட்சி, 10 ஆவது வார்டுக்குட்பட்டு லட்சுமி லே அவுட் என்ற வீட்டுமனைகள் உள்ளன. அரசின் சட்டவிதிப் படி அனைத்து துறைகளுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் பூங்கா அமைக் கவும் இடம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் பேரூராட்சி நிர்வாகத்தின் சேகரிக்கப்பட்ட குப்பைகள் கொட்டப்படுவதால் அருகில் இருக்கும் மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் குப்பைக்கு தீ வைப்பதால் சுற் றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகிறது. பொது மக் களை பாதிக்கும் வகையில் இருக்கும் குப் பையை அகற்றி, இனி வரும் காலங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும், பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் பேரூராட்சி நிர்வாகத்தினர் மரங்களை வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.