districts

img

சிறு பட்டறைகளுக்கு சலுகை கட்டணத்தில் மின்சாரம் வழங்கிடுக

கோவை, அக்.9- தங்க நகைத்தொழிலில் ஈடு படும் சிறு பட்டறைகளுக்கு சலுகை கட்டணத்தில் மின்சாரம் வழங்க  வேண்டும் என கோயம்புத்தூர் தங்கநகைத் தொழிலாளர் யூனியன்  (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது. கோயம்புத்தூர் தங்கநகைத்  தொழிலாளர் யூனியன் (சிஐடியு) 11  ஆவது ஆண்டு பேரவை கோவை  காந்திபார்க், மாநக வீதியில், தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவு அரங் கத்தில் திங்களன்று நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் என்.எம்.கண் ணன் தலைமையில் நடைபெற்ற பேரவையில், மூத்த தலைவர்  எஸ். பலவேசம் கொடியேற்றினார்.  ஏ.செந் தில் வரவேற்றார். பேரவையை துவக்கிவைத்து சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஆர்.ராஜன்  உரையாற்றினார். வேலை அறிக் கையை பொதுச்செயலாளர் பி.சந் திரன், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் பி.மருதன் ஆகி யோர் முன்மொழிந்தனர். இந்நிகழ் வில், சங்க சட்ட ஆலோசகர் வழக் கறிஞர் பி.ஜோதிகுமார், கோவை மாவட்ட ஹோட்டல் தொழிலாளர் சங்கச் செயலாளர் சந்தோஷ் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். இதில், சிறு பட்டறை வைத்தி ருக்கும் தங்கநகைத் தொழிலாளர்க ளுக்கு சலுகை கட்டணத்தில் மின்சா ரம் வழங்க வேண்டும். 10 தொழி லாளர்களுக்கு குறைவாக உள்ள பட்டறைகளுக்கு தொழில் வரி விலக்கு அளிக்க வேண்டும். தங்க  நகை தொழிலாளர்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும். ஒருங்கி ணைந்த வளாகங்களில் குறைந்த வாடகையில் பட்டறை அமைக்க கட்டடங்கள் கட்டித் தர வேண்டும். தங்க நகைத் தொழிலாளர்களுக்கு தங்கம் விலை ஏறும்பொழுது உற்பத்தியாளர்கள் கூலி என்கின்ற  பர்சன்டேஜ் குறைக்கக்கூடாது‌ உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  பேரவையில், தலைவராக என். எம்.கண்ணன், பொதுச் செயலாள ராக பி.சந்திரன், பொருளாளராக பி. மருதன் மற்றும் ஆறு பேர் கொண்ட  துணை நிர்வாகிகள் உள்ளிட்ட 12 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு  செய்யப்பட்டது. பேரவையை நிறைவு செய்து சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார். முடிவில், எஸ்.சம்பத்குமார் நன்றி கூறினார்.