நாமக்கல், டிச.12- சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகளை மூட வேண்டும், என வலியுறுத்தி பொது மக்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையத்தில் ஈ.ஆர் தியேட்டர், வசந்தா நகர், பெரியார் நகர், காவிரி ஆர்.எஸ். புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் செயல்படும் சாய ஆலைகளால் கடந்த சில மாதங் களாக, பொதுமக்கள் பல்வேறு இன் னல்களை சந்தித்து வருகின்றனர். இங்குள்ள 20க்கும் மேற்பட்ட ஆலை கள், சாய நீரை சுத்திகரிக்காமல் சாக்கடை கால்வாயில் வெளி யேற்றுவதால், நிலத்தடி நீர் மற்றும் காவிரி ஆறு மாசடைந்து தண் ணீரை உபயோகிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம் பந்தப்பட்ட துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தும் இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இதனி டையே, கோட்டாட்சியர் சுகந்தி தலைமையில் சாயப்பட்டறை உரி மையாளருடன் கலந்தாய்வுக்கூட் டம் நடத்தப்பட்டு, சாயப்பட்டறை உரிமையாளர்கள் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டால் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். ஆனா லும், அன்று இரவே சாயப்பட்டறை ஆலைகள் சாய தண்ணீரை சுத்திக ரிப்பு செய்யாமல் கால்வாயில் கலந்து விட்டனர். இதனால் பெரும் கொந்தளிப்ப டைந்த அப்பகுதி பொதுமக்கள் மற் றும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் வசந்த நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் புதனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுத்திகரிக்கப்படாத சாய நீரை அருந்தி கேன்சர் நோயால் ஒருவர் படுக்கையில் இறந்த நிலையில் படுத்திருப்பது போலவும், பின்னர் பாடை கட்டி சடலத்தை எடுத்துச் செல்வது போல நூதன முறை யில் கட்டிலில் படுத்திருந்த இளை ஞரை கொண்டு சென்றனர். இந்த நூதன ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதி யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதிமுக ஆர்ப்பாட்டம் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சாய ஆலைகளை மூட வலியு றுத்தி, பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வியாழனன்று, மதிமுக மற்றும் பொதுநல அமைப் புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமா னோர் கலந்து கொண்டு, நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பினர்.