districts

img

விவசாயிகள், குடியிருப்போரை வெளியேற்றுவதா?

திருப்பூர், அக். 16 - அறநிலையத் துறை நிலத்தில் குடியிருப்போர், விவசாயிகளை வெளியேற்றுவதை எதிர்த்து தமிழ் நாடு அடிமனை பயனாளிகள் குத் தகை விவசாயிகள் சங்கத்தின் சார் பில் திருப்பூரில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் பெருமாள் கோவில் வீதி யில் உள்ள அறநிலைத்துறை அலுவ லகம் முன்பு திங்களன்று நடைபெற்ற தொடர் முழக்க போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி. சுப்பிரமணியம் தலைமை வகித் தார். இந்த போராட்டத்தில் அற நிலையத்துறை சட்டப்பிரிவு 78, 79ஐ பயன்படுத்தி குடியிருப்புவாசிகள், விவசாயிகளை ஆக்கிரமிப்பாளர் எனக்கூறி வெளியேற்றக் கூடாது. இனாம் ஒழிப்பு, ராயத்துவாரி நிலங் களை பூஜ்ஜிய மதிப்பு செய்து பத் திரப் பதிவு செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையாணையை திரும்பப் பெற  வேண்டும்.

பல தலைமுறைகளாக அனுபவத்திலுள்ள நிலங்களை நியா யமான விலை தீர்மானித்து அவர்க ளுக்கே சொந்தமாக்க வேண்டும். விவசாயிகளை அச்சுறுத்தி ஏலம் விடும் நடவடிக்கையை கைவிட வேண்டும். குத்தகை பதிவு செய்து கொடுக்க வேண்டும், அரசாணை 318ஐ செயல்படுத்த சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், அற நிலைத்துறை சட்டப்பிரிவு 34ன்படி  பல தலைமுறைகளாக குடியிருப் பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு அந்தந்த இடங்களுக்கு நியா யமாக விலை தீர்மானித்து அவர்க ளுக்கு சொந்தமாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டன. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைச்செயலாளர் பி.பெ ருமாள், மாவட்டச்செயலாளர் ஆர்.குமார், அடிமனை பயனாளிகள் குத் தகை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வெங்கட்ராமன், திருப்பூர் தெற்கு மாநகர செயலா ளர் டி.ஜெயபால் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி உரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, நடராஜ், கணேஷ், ரவி உள்பட திர ளானோர் கலந்து கொண்டனர். தமிழ் நாடு தென்னை விவசாயிகள் சங்க  மாவட்டப் பொருளாளர் லெனின்கு மார் நன்றி தெரிவித்தார்.  நிறைவாக திருப்பூர் இந்து சமய  அறநிலையத்துறை இணை ஆணை யர் அலுவலகத்தில் மேலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.