திருப்பூர், செப்.17- தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந் தநாள் விழாவை கொண்டாடும் வகை யில், செவ்வாயன்று திருப்பூரில் முற் போக்கு அமைப்புகளின் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று பெரியாரின் உருவ பத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த னர். தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந் தநாள் விழா திங்களன்று கொண்டாடப் பட்டது. இதை முன்னிட்டு திருப்பூரில் திங்களன்று தந்தை பெரியார் திராவி டர் கழகம் மற்றும் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் ஊர்வலம் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலை வர் சன்.முத்துக்குமார் தலைமையில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டி ருந்த தந்தை பெரியாரின் உருவப்ப டத்துக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இதைதொ டர்ந்து பெரியாரின் உருவப்படத்தை ஏந்தி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பறையிசை முழங்க மாநகராட்சி அலுவலகம் அருகே இருந்து ஊர்வல மாக திருப்பூர் ரயில் நிலையம் முன்புறம் வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் சிலைக்குச் சென்றனர். அங்கு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சமூக நீதி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில், தந்தை பெரியார் திரா விடர் கழகத்தின் மாநில அமைப்பா ளர் இல.அங்ககுமார், திராவிடர் கழகத் தின் மாவட்டச் செயலாளர் யாழ்.ஆறுச் சாமி , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் மற்றும் கலைஞர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன், தமி ழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப் பின் வழக்கறிஞர் மோகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலை வர் ச.நந்தகோபால், மாவட்டச் செயலா ளர் சி.கே.கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தெற்கு நகரச் செயலா ளர் டி.ஜெயபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் செல்வ ராஜ், நவீன மனிதர்கள் அமைப்பின் பாரதி சுப்பராயன், ஆதித்தமிழர் பேர வையை சேர்ந்த ஜானகி மற்றும் கவிதா, புரட்சிகர இளைஞர் முன்னணியின் தமிழ் அமுதன், மக்கள் பாதுகாப்பு சங் கத்தின் கார்மேகம் உள்ளிட்ட முற் போக்கு அமைப்பைச் சேர்ந்த ஏராள மானோர் கலந்து கொண்டிருந்தனர். முன்னதாக வெள்ளியங்காடு நால் ரோடு பகுதியில் தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.