கோவை, ஜன. 17- தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ள சின்னாம்பதி மலைக் கிராமத்தில் பழங்குடியின மக்க ளின் பொங்கல் விழா எழுச்சியோடு நடைபெற்றது. கோவை, மதுக்கரை தாலுகா விற்குட்பட்ட, மாவுதம்பதி ஊராட் சிக்குட்பட்டது, சின்னாம்பதி கிரா மம். கோவையில் இருந்து கேரளா செல்லும் வழியில் வாளையார் அருகே இக்கிராமம் உள்ளது. மேற் குத்தொடர்ச்சி மலையின் அடிவா ரத்தில் உள்ள சின்னாம்பதியில் பழங்குடியின மக்கள் வசித்து வரு கின்றனர். தருமபுரி மாவட்டம் வாச் சாத்தி கிராமத்தை வனத்துறை, அதிரடிப்படை எப்படி சூறையாடி னார்களோ, அதே போன்ற தாக்கு தலுக்கு உள்ளான கிராமம்தான் இந்த சின்னாம்பதியும். வாச்சாத் தியை போன்றே நீதிக்கான நெடு போராட்டத்தை இம்மக்கள் எதிர் கொண்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் தலையீடு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும், விவசாயிகள் சங் கம், மாதர் சங்கம், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்திய களப்போராட்டமும், சட்டப்போ ராட்டமும் இவர்களுக்கான நீதியை பெற்றுத்தந்தது. அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு வருடமும் பொங்கல் விழாக்களை மலைவாழ் மக்கள் சங்கம், விவசாயிகள் சங்கம் இணைந்து இக்கிராமத்தில் பொங் கல் விழாவை எழுச்சியோடு நடத்தி வருகின்றனர்.
இதன்தொடர்ச்சியாக புத னன்று சின்னாம்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட் டிகள் வெகுவிமர்சையாக நடை பெற்றது. இதில், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்குமான விளையாட்டு போட்டிகள் நடை பெற்றது. 20க்கும் மேற்பட்ட போட் டிகள் நடைபெற்றதில் மாவுத்தம் பதி ஊராட்சியில் வசிக்கும் பழங் குடி மக்கள் திரளாக கலந்துகொண் டனர். வெற்றி பெற்றவர்களுக்கு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பரிசுகள் வழங்கி கௌர விக்கப்பட்டது. முன்னதாக, தஞ்சை தமிழ்வாணனின் இசைநிகழ்ச்சியு டன் பொங்கல் விழா துவங்கியது. பொங்கல் விழா நிகழ்விற்கு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங் கத்தின் ஒன்றியத் தலைவர் எஸ்.சி சண்முகம் தலைமை ஏற்றார். தமிழ் நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.பி இளங்கோவன் முன் னிலை வகித்தார். இதில், மாவுத் தம்பதி ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.கோமதி செந்தில்குமார்,
மாவுத்தம்பதி 1ஆவது வார்டு உறுப் பினர் எஸ். நல்லிசண்முகம், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் கௌரவத் தலைவர் கே.அய்யா சாமி, விவசாயி சங்க பொறுப்பா ளர் எஸ்.கருப்பையா,மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம். பஞ்சலிங்கம், எழுத்தாளர் கா.சு.வேலாயுதம், தமுஎகச நிர்வாகி தர்ம லிங்கம்,சிபிஎம் கிளைச்செயலா ளர் சாவடி கந்தசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து சின்னாம்பதி பழங் குடியின மக்கள் கூறுகையில், சில வருடங்களுக்கு முன்னால், எங்கள் மக்கள் குடியிருப்பதற்கு சரியான வீடுகளோ, சாலை வசதியோ, குடி நீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வச திகள் இல்லாத சூழல் இருந்தது. மேலும், சாலை, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல் லாத நிலையே இருந்து வந்தது. தற்போது குடியிருப்பதற்கு அரசு தொகுப்பு வீடுகளும் குடிநீர் வசதி யும் எங்கள் பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்கான சாலை வசதிகள் செய்து தரப்பட் டுள்ளது. இந்த வசதிகள் அனைத் தும், மலைவாழ் மக்கள் சங்கத் தின் தொடர்ச்சியான போராட் டத்தின் காரணமாகவே எங்க ளுக்கு கிடைத்துள்ளது.
ஒவ்வொரு அடிப்படை தேவை களுக்கும் அரசிடம் மனு அளித்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவருடன் முறையிட்டு தொடர்ச்சியாக வலியுறுத்தி மலை வாழ் மக்கள் சங்கம் எங்களுடன் நின்றது. சொற்ப ஊதியத்திற்கு கூலி வேலை செய்து கொண்டி ருந்த ஒவ்வொருவரும் இன்று கல் லூரி படிப்பு அரசு வேலை என கௌரவமாக வாழ்கிறார்கள் என் றால் அதற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் எங்கள் மீது காட்டி அக்கறையும், அன்புமே கார ணம். மாவுத்தம்பதி ஊராட்சி மன்ற தலைவர் கோமதி செந்தில் குமார். மற்றும் துணைத் தலைவர் புவ னேஸ்வரி தண்டபாணி ஆகியோர் கூறுகையில், பழங்குடி மக்களு டைய குடியிருப்புகளில் புதிதாக 85 வீடுகள் கட்டபட்டுள்ளன. மழை அடிவாரத்தின் சுனைகளில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்கு ஏற் பாடு செய்யப்பட்டது. குடிநீர் சுத்திக ரிப்பு நிலையம் பழங்குடி குடியிருப் புகளுக்கு வழங்கப்பட்டது. புதிதாக துவக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், நியாய விலைகடை கட்டப் பட்டுள்ளது. புதிதாக 45 பேருக்கு வீட்டு மனைபட்டா வழங்கப்பட்டுள் ளது. மாட்டுச் சாணம் காய்கறி கழிவு கள் மூலம் பயோகேஸ் உற்பத்தி பிளாண்ட் ஏற்பாடு செய்து தரப்பட் டுள்ளது. முன்னுரிமை அடிப்படை யில் 100 நாள் வேலை ஒதுக்கீடு செய்து வருமான வாய்ப்பு வழங்கி வருகிறோம். மேலும், ஹெல்த் சென்டர் புதிதாக ஆரம்பித்து அதற் கான கட்டுமானப் பணிகள் நடை பெற்று வருகிறது. விரைவில் பயன் பாட்டுக்கு கொண்டு வருவோம் என் றார். பொங்கல் விழாவின் நிறைவாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாவுத்தம் பதி கிளை செயலாளர் கே.ரங்கநா தன் நன்றி கூறினார்.