திருப்பூர், ஜன.20 - பல்லடம் தாலுகா மாணிக்காபுரத்தில் 24 ஆம் ஆண்டு மக் கள் ஒற்றுமை பொங்கல் விளையாட்டு விழாவை இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் ஞாயிறன்று நடத்தினர். மாணிக்காபுரம் பகுதியில் ஊர் பொதுமக்கள் மற்றும் இந் திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 24 ஆம் ஆண்டு மக் கள் ஒற்றுமை பொங்கல் விளையாட்டு விழாவில் சிறுவர் கள், பெண்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இரவு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், வாலிபர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் செ.முத்துகண் ணன், முன்னாள் பல்லடம் செயலாளர் ஆர்.பரமசிவம், விவ சாய சங்க மாவட்ட நிர்வாகி வை.பழனிச்சாமி, வாலிபர் சங்க பல்லடம் ஒன்றியக் குழு நிர்வாகிகள் நாகேந்திரன், முருகேஷ், தினகரன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பிரவீன்கு மார், மாவட்ட நிர்வாகிகள் விமல்ராஜ், கிருஷ்ணகுமார், கிளை நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், முருகேஷ், விஜய், சூர்யா உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.