districts

img

கம்மாளப்பட்டி கூட்டு குடிநீர் திட்டம்

கோவை, மார்ச் 26- கம்மாளப்பட்டி கூட்டு  குடிநீர் திட்டத்தை நிறை வேற்ற நடவடிக்கை எடுக் கப்படும் என பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கே.ஈஸ்வ ரசாமி வாக்குறுதி கொடுத் தார். 

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மக்கள வைத் தொகுதி திமுக வேட்பாளராக கே.ஈஸ்வரசாமி போட்டியிடுகிறார். இவர், பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக வால் பாறை சட்டமன்ற தொகுதி ஆனைமலை கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட துறையூர், அரசூர், குள்ளே கவுண்டனூர், கரியாஞ் செட்டிபாளையம், பில் சின்னம்பாளையம், பால்பண்ணை, ந.மு.சசுங்கம், வேடசந்தூர், அங்கலக்குறிச்சி, ஆழியார்  ஆகிய 39 இடங்களில், செவ்வாயன்று பிரச்சாரம் செய்தார். இவருக்கு, அப்பகுதி மக்கள் உற்சாக அமோக வரவேற்பை அளித்தனர். 

உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு பேசிய கே.ஈஸ்வரசாமி, ஆனைமலை ஒன்றி யத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க, கம்மாளப்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார். 

இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் திமுக கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், ஆனைமலை ஒன்றியச் செயலாளர் யுவராஜ் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.