திருப்பூர், ஜன.13- குண்டடம் அருகே, சமத்துவபுரத் தில் நடைபெற்ற சுகாதார பொங்கல் மற் றும் சமத்துவ பொங்கல் விழாவில், சுயமரியாதை பகுத்தறிவுப் பார்வையு டன் இணைந்து, சமூக சமத்துவ நிலையை உருவாக்குவோம் என்று சமத்துவ பொங்கல் உறுதிமொழி எடுத் துக்கொள்ளப்பட்டது. திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், செங்கோடம்பா ளையம் ஊராட்சி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சுகாதார பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழாவை மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் வெள்ளி யன்று துவக்கி வைத்தார். இந்த சமத் துவ பொங்கல் விழாவில் மாணவ, மாண வியர்களுக்கு பேச்சுப்போட்டி, நாடகம், சமத்துவ கோலங்கள் போடும் நிகழ்ச்சி, கும்மிபாட்டு மற்றும் பல்வேறு விளை யாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப் போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து, தமிழ்நாட்டில் சமத்துவம் சகோதரத்தோடு ஒருங் கிணைந்து ஒற்றுமையுடன் செயல்படு வோம், எங்களின் ஒவ்வொரு செயலும் சமூக நிதியை உறுதிப்படுத்தி சமத்துவ சமுதாயத்தை இதன் மூலம் உருவாக்கு வோம். சுயமரியாதை பகுத்தறிவுப் பார் வையுடன் இணைந்து சமூக சமத்துவ நிலையை உருவாக்குவோம். மேலும் ஏழை மகளிர்க்கு முன்னுரிமை அளித்து அதன்முலம் வலுவான மக்கள் கட்ட மைப்பை உருவாக்கி மாற்றுத்திறனா ளிகள் மற்றும் நலிவுற்றோருக்கு உறுது ணையாக இருப்போம். அனைவரும் ஒன்றிணைந்து ஏழைகளின் வளர்ச்சி மற்றும் சமுதாயத்தின் பங்கினை உறுதி செய்வோம். இதன்மூலம் அனைத்து குடும்பங்களின் பொருளாதார நிலை யினை மேம்படுத்துவோம் என இதன் மூலம் உறுதி கூறுகிறோம் என சமத்துவ பொங்கல் உறுதிமொழி எடுத்துக்கொள் ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அ.லட்சுமணன், திட்ட இயக்குநர் (மக ளிர் திட்டம்) மதுமிதா, செங்கோடம்பா ளையம் ஊராட்சி மன்றத்தலைவர் சரஸ் வதி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.