districts

img

செயல்படாத வாட்டர் ஏடிஎம்கள்!

உதகையில் பிளாஸ் டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலை யில் சுற்றுலாப் பயணிக ளின் வசதிக்காக ஏற்ப டுத்தப்பட்ட வாட்டர் ஏடி எம்கள் செயல்படாத அவல நிலை ஏற்பட்டுள்ள தால், சுற்றுலாப் பயணிக ளின் வசதிக்காக மீண்டும்  வாட்டர் ஏடிஎம்களை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது.  நீலகிரி மாவட்டத்தின் அழகையும், சுற்றுச்சூழ லையும் பாதுகாக்கும் நோக்கில் 19 வகையான  பிளாஸ்டிக் பொருட்க ளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதுமட்டு மின்றி ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் விற்பனை  செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத் தரவையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகள், மாநில மற் றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந் துள்ள அனைத்து கடைகள், வணிக வளா கங்களில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள்  மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், உணவு பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், பொதுமக்கள் மற்றும்  சுற்றுலாப் பயணிகள் குடிநீர் பெற ஏது வாக மாவட்டத்தின் நெடுஞ்சாலைகள், சுற்றுலாத் தலங்கள், பொது இடங்களில் என 68 இடங்களில் சுத்திகரிக்கும் குடிநீர் எந்திரங்கள் (வாட்டர் ஏடிஎம்)  அமைக்கப் பட்டன. இவை 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடைமு றைக்கு  கொண்டு வரப் பட்டது. ஆரம்ப காலங்க ளில் முறையாக செயல் பட்டு வந்தன. ஆனால், காலப்போக்கில் முறை யான பராமரிப்பு இல்லாத தால் 90 சதவீத வாட்டர் ஏடிஎம்கள் தண்ணீரின்றி பழுதடைந்து காட்சியளிக் கின்றன. தற்போதைய வாட்டர் ஏடிஎம்களில் தண் ணீர்  இல்லாததால் சுற்று லாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ள னர். எனவே, சுற்றுலாப் பய ணிகளின் நலன் கருதி வாட்டர் ஏடிஎம் களை சரி செய்து தங்கு தடையின்றி தண் ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத் தப்பட்டுள்ளது. மேலும், வாட்டர் ஏடிஎம் கள் செயல்படாத நிலையில், அதன்  அருகே தகாத செயல்களில் ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வரு கின்றனர். உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்  பெற்றுள்ள நீலகிரி மாவட்டம் உதகை யில் முறையாக வாட்டர் ஏடிஎம்கள் செயல்படுத்த வேண்டும். தகாத செயல் களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் வலியு றுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. -ஜே.ஷேக் அமீன்