உதகை, ஜூலை 26- உதகை அரசு தாவரவியல் பூங்கா வில், இரண்டாவது சீசனுக்காக மலர் நாற்றுகள் நடும் பணி வெள்ளியன்று துவங்கியது. கடந்த 1848 ஆம் ஆண்டு மெக் ஐவர் என்பவரால் உதகை அரசு தாவரவியல் பூங்காவின் வடிவமைப்பு தொடங்கப் பட்டு, நடப்பாண்டுடன் 176 ஆவது ஆண்டை இப்பூங்கா நிறைவு செய்கி றது. இந்நிலையில், நடப்பாண்டின் இரண்டாம் சீசன் செப்டம்பர் மாதத்தில் தொடங்குவதை முன்னிட்டு, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க் காட்சிக்காக செடிகள் நடவுப்பணிகள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு முன்னிலையில் வெள்ளியன்று காலை தொடங்கி வைக்கப்பட்டது. இம் மலர்க்காட்சிக்காக நாட்டின் பிற மாநி லங்களான கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், புனே போன்ற இடங்களிலி ருந்து இன்கா மேரிகோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, ஆஸ்டர், வெர்பினா, ஜாபின், கேன்டிடப்ட், காஸ்மஸ், பேன்சி, பெட் டூனியா, ஜினியா, ஸ்விட்வில்லியம், அஜிரேட்டம், கேலண்டுலா, ஹெலிக்ரை சம், சப்னேரியா போன்ற 60 வகைகளில் பல்வேறு வகையான மலர் விதைகள் பெறப்பட்டது. சுமார் 5 லட்சம் வண்ண மலர்ச்செடிகள் இரண்டாவது மலர்க் காட்சிக்காக மலர்ப்பாத்திகளில் நடவுப் பணியும், 15 ஆயிரம் மலர்த்தொட்டிக ளில் சால்வியா, டெய்சி, டெல்பினியம், டேலியா போன்ற 30 வகையான மலர்ச் செடிகள் நடவுப்பணியும் தொடக்கி வைக்கப்பட்டது. இந்த இரண்டாம் சீச னுக்காக சுமார் 3 லட்சத்திற்கும் அதிக மான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக, தோட்டக் கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.