கோவை, ஜூலை 16- கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பில்லூர் அணை நிரம்பி யுள்ளது. இதனால், கரையோர பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், என மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிக ளான நீலகிரி மற்றும் கேரள மலைக் காடுகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள் ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர துவங்கி செவ்வாயன்று அதிகாலை அணையின் மொத்த நீர்தேக்க உய ரமான 100 அடியில் 97 அடியை கடந் துள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி வரை நீர்வரத்து உள்ளதால், அணையின் நான்கு மதகுகளும் திறக்கப்பட்டு உபரி நீர் பவானி யாற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால், பவானி ஆற்றின் வேக மும் அதிகரித்துள்ளது. இதன் கார ணமாக பவானியாற்று கரையோர பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி பொது மக்கள் பாதுகாப்பாகவும், யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல்கள் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளது.