ஈரோடு, ஜூலை 27- பொதுமக்களுக்கான மருந்து கொள் கையை ஒன்றிய அரசு வகுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு மருந்து மற்றும் விற் பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் வெள்ளி யன்று பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர். இன்றைய காலச்சூழலில் மருந்து ஒரு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. நோய் பரப்பும் நுண்கிருமிகள் ஒரு பக்கம் என்றால், ஆஸ்துமா, இருதய நோய், மூட்டு வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற நாள் பட்ட வாழ்வியல் சம்பந்தப்பட்ட உபாதைகள் மறுபுறம். ஆகையால் மருந்தும், மருத்துவமும் இன் றியமையாதாக மாறியிருக்கிறது. இந்நி லையில், மருத்துவமும், மருந்தும் மக்க ளுக்கு கிடைக்கச் செய்வது அரசின் தலை யாய கடமையாகும். ஆனால், மருத்துவத் திற்கான செலவில் சராசரியாக 50 விழுக் காடு பொதுமக்கள் கையில் இருந்து செலவு செய்ய வேண்டியிருக்கிறது. பல நேரங்க ளில் சொத்தை விற்று, கடன் பட்டு மருத்துவத் திற்கு செலவு செய்வதையும் காண முடி கிறது. எனவே, ஒன்றிய அரசு மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 5 விழுக்காட்டை சுகாதா ரத்திற்கு ஒதுக்க வேண்டும். மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு சராசரியாக 12 விழுக்காடு ஜிஎஸ்டி வரி வசூலை செய்ய ரத்து செய்ய வேண்டும். மருந்துகளின் விலையை உற்பத்தி விலையில் இருந்து நிர்ணயிக்க வேண்டும். சந்தையில் விலையில் இருந்து தீர்மானிப்பதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். சுகாதாரமும், மருத்துவமும் தனியா ரின் லாப வேட்டைக்கான சந்தையாக இல்லா மல் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்களுக்கான மருந்து கொள்கையை ஒன்றிய அரசு வகுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஈரோடு மாவட்டம், வீரப்பன் சத்திரத்தில் வெள்ளியன்று பிரச்சார இயக்கத்தில் ஈடுபட் டனர். இப்பிரச்சார இயக்கத்திற்கு, சங்கத் தின் கிளைத் தலைவர் சுரேஷ் பாபு தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத்த லைவர் ஆர்.ரகுராமன், மருந்து விற்பனை பிர திநிதிகள் சங்கத்தின் மாநில நிர்வாகி நாரா யணசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். செயலாளர் சங்கரன் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.