ஈரோடு, நவ.21- சட்டப்படியான ஊதியம் வழங்க வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர் கள் கொசு வலையை போர்த்திக் கொண்டு மனு அளிக்க வந்த தால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்ட தூய்மை பணியாளர் சங்கம் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கொடுமுடி வட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பல வருடங்களாக டெங்கு மஸ்தூர் பணியாளர்களாக வேலை செய்து வருகிறோம். மற்ற ஒன்றியங்களில் வழங்குவது போல் சம்பளம் வழங்க வேண் டும். மக்கள் தொகை எண்ணிக்கை ஏற்ப பணியாளர்களை நிய மிக்க வேண்டும். ஆண்டிற்கு இரண்டு செட் உடை வழங்க வேண்டும். சம்பளமாக மிகவும் சொற்ப கூலி கிடைக்கிறது. அதையும் மாத மாதம் வழங்காமல் இழுத்தடித்து வழங்கப் படுகிறது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு கோரிக் கைகளை நிறைவேற்ற வேண்டுமென அதில் தெரிவித்தி ருந்தனர்.