திருப்பூர், டிச.16- கலைஞர் பேருந்து நிலையத்திற் குள் தள்ளுவண்டி வியாபாரிகளை, வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண் டும் என வலியுறுத்தி, சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள் ளியன்று மனு அளிக்கப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.பாலன் அளித் துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் பழைய பேருந்து நிலையம் உள்பகுதியில் சுமார் 30 ஆண்டுகால மாக தள்ளுவண்டியில் 30 பேர் மாலை 5 மணி முதல் 9 மணி வரை மக்களுக்கு இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து வருகின்றனர். ஒன்றிய அர சின் சாலையோர வியாபாரிகளுக்கான தேசிய கொள்கைப்படி மாநகராட்சி நிர்வாகம் சாலையோரத்தில் வியாபா ரம் செய்பவர்களுக்கான அடையாள அட்டை வழங்கி உள்ளது. இந்நிலை யில் பழைய பேருந்து நிலையத்தை இடித்து புதுப்பித்து கட்டும் பணி முடிந்து, கலைஞர் பேருந்து நிலையம் திறக்கப் பட்டுள்ளது. பல ஆயிரக்கணக் கான சாதாரண ஏழை, எளிய மக்கள் வந்து செல்லும் இட மாகவும் குறைந்த விலை யில் பொருட்கள் வாங்குவ தற்கு வாய்ப்பாக உள்ளது. எனவே, கலைஞர் பேருந்து நிலையம் உள்ளே போக்குவரத்திற் கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து கொள்ள அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கி றோம் என்று கூறப்பட்டுள்ளது.