திருப்பூர், நவ. 8- வக்பு வாரியத்தால் பத்திர பதிவிற்கு தடங் கள் மனு அளிக்கப்பட்டுள்ள நிலங்களில், பத் திரப்பதிவு செய்ய தடையை நீக்க கோரி ஊத் துக்குளி சார் பதிவாளரிடம் மனு அளிக்கப்பட் டது. ஊத்துக்குளி வட்டம், வடுகபாளையம் கிராமத்தில் 73, 77, 78 ஆகிய சர்வே எண்களில் பத்திரப்பதிவிற்கு தடங்கல் கோரி வக்பு வாரியத்தால் மனு அளிக்கப்பட்டுள் ளது. இதனால் மேற்கண்ட சர்வே எண்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள், நில உரிமையாளர்கள் சுமார் 40 பேர் செவ் வாய்க்கிழமை ஊத்துக்குளி சார்பதிவாள ரிடம் மனு கொடுத்தனர். இந்த பூமியானது ரயத்துவாரி பட்டா மற்றும் கிரய ஆவணங்களின்படி எங்களுக்கு உரியதாகும். மிக நீண்ட வருடங்களாக எவ் வித ஆட்சேபனையும் இல்லாமல் இந்த சர்வே எண்களில் கிரையம் மற்றும் தொடர்ந்து ஆவணப்பதிவு நடைபெற்று வரு கிறது.
மேலும் அரசுக்கு செலுத்த வேண் டிய வரிகளையும் முழுமையாக செலுத்தி வருகிறோம். இந்நிலையில் இந்த சொத்திற்கு எவ் வித சம்பந்தமும், உரிமையும் இல்லாத வக்பு வாரியம் மூலம் தடங்கல் கடிதங்கள் அனுப் பப்பட்டு இருப்பதாக சார்பதிவாளர் அலுவ லகம் மூலம் அறிய முடிகிறது. ஒரு சொத்தின் மீது தடங்கல் கடிதமோ, தடையானையோ வழங்கப்படும் பொழுது அதன் மூல ஆவணங்களை சரிபார்த்து முடிவு செய்ய வேண்டும் என்று பதிவுத் துறை தலைவர் கூறியிருக்கிறார். உரிய ஆவ ணங்களுடன் கொடுக்கப்படும் தடங்கல் கடி தம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட வேண் டும். ஆனால் மேற்படி சொத்துக்கு உண்டான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் தெளி வாக உள்ளன. அப்படி இருக்கும் பொழுது வக்பு வாரிய தடங்கல் மனுவை நிராகரிப் பதற்கு பதிலாக, எங்களது பத்திரப்பதிவு நட வடிக்கையை தடை செய்வது பதிவுத்துறை தலைவரின் சுற்றறிக்கைக்கு முரணானதா கும். மேலும் எங்கள் பூமிக்கு வருவாய் துறை யின் மூலம் எவ்வித ஆட்சேபனையும் பெறப் படவில்லை. எனவே இந்த பூமி எங்களுக்கு பாத்தியப்பட்டதாகும். எனவே மேற்படி எண் களுக்கு உட்பட்ட நிலங்களின் பத்திர பதிவுக் கான தடையை நீக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியுள்ளனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், அதிமுக தெற்கு ஒன்றிய செயலா ளர் கே.சக்திவேல், கொமதேக மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.பி. சீனிவாசமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.