திருப்பூர், ஜூலை 21- இபிஎப் ஓய்வூதியர்களுக்கு மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் ஓய்வூ தியம் வழங்க, பிரதமர் மற்றும் நிதியமைச்சரிடம் வலியுறுத்தும் படி, திருப்பூர் நாடாளுமன்ற உறுப் பினர் கே.சுப்பராயனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இபிஎப் - 95 திருப்பூர் மாவட்ட ஓய்வூதியர்கள் நலச்சங்க தலைவர் சி.ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் வி. கோபால், பொருளாளர் எம்.தேவ ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஞாயி றன்று திருப்பூர் நாடாளுமன்ற கே. சுப்பராயனை, அவரது அலுவலகத் தில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். வருங்கால வைப்பு நிதி திட்டமான இபிஎஸ் – 95 பென்சன் திட்டத்தில் இந்திய முழுவ தும் சுமார் 77 லட்சம் பேர் ஓய்வூதி யம் பெற்று வருகின்றனர். இதில் தமிழ்நாட்டில் 10 லட்சம் பேர் உள்ள னர். இந்தியா முழுவதும் 32 லட்சம் பேருக்கு மேற்பட்டோர், மாதந்தோ றும் ரூ.500லிருந்து ரூ.1000 வரை மட்டுமே ஓய்வூதியம் பெறுகின்ற னர். மற்றவர்களும் ரூ.3 ஆயிரத் துக்கு கீழ் தான் ஓய்வூதியம் பெறு கின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு இபிஎப் - 95 ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் ரூ.1000 என்று ஒன்றிய அரசு அறிவித்தது. 58 வயதுக்கு முன்பாக பணியில் நின்றவர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் மறுக்கப்பட்டு வருகி றது. மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும் என்று பலகட்ட போராட்டங்கள் நடத்தி யும், உயர்ந்தபட்ச பென்சன் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த போதிலும், இபிஎப் நிர்வாகம் பல குழப்பங் களை ஏற்படுத்தி, உயர் பென்சனை மறுத்து வருகிறது. எனவே, ரூ.9 ஆயிரம் ஓய்வூதி யம் வழங்க நாடாளுமன்றத்தில், பிர தமர் மற்றும் நிதியமைச்சரிடம் வலி யுறுத்த வேண்டும். பகத்சிங் கோசரியா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில், இடைக்கால நிவா ரணமாக ரூ.3 ஆயிரம் பென்சன் உட னடியாக வழங்க வேண்டும். மருத் துவ காப்பீடு திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும். மூத்த குடிமக்க ளுக்கு ரயில் பயணக் கட்டண சலு கையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உயர் பென்சன் வழங்க வேண்டும். இதுகுறித்து ஒன்றிய அரசை வலியுறுத்த வேண் டும், என கேட்டுக் கொண்டனர். இந்த கோரிக்கைகளை நாடா ளுமன்றத்தில் வலியுறுத்துவதாக கே.சுப்பராயன் எம்.பி. உறுதியளித் தார்.