தருமபுரி, மே 31- பாலக்கோடு அருகே மதுபா னக்கடை திறக்க எதிர்ப்பு தெரி வித்து, கூசிக்கொட்டாய் கிராம மக் கள் துணை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக் கோடு, ஜெர்தலாவ் ஊராட்சிக்குட் பட்டது கூசிக் கொட்டாய். இக்கிரா மத்தில் இந்து, முஸ்லீம் என 100க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்ற னர். இப்பகுதியில் கடந்த 2 ஆண்டு களுக்கு முன்னர் புதிததாக மதுக் கடை திறக்க அரசு முடிவு செய்தது. அதனைத்தொடர்ந்து லாரியில் மதுபானங்கள் எடுத்து வரப்பட் டதை அறிந்த, அப்பகுதி பொதுமக் கள் லாரியை சிறைபிடித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மதுபானக்கடை திறப்பு கைவிடப் பட்டது. தற்போது மீண்டும் அதேப் பகுதியில் மதுபானக்கடை திறக்க உள்ளதாக தகவல் பரவி வருகி றது. இதையடுத்து 50க்கும் மேற் பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து பாலக்கோடு வட்டாட்சியர் அலுவ லகத்திற்கு வந்தனர். அப்போது அங்கிருந்த துணை ஆட்சியர் ரியா விடம், கூசிக்கொட்டாய் பகுதியில் மதுபானக்கடை திறக்கக்கூடாது என்றுக்கூறி மனு அளித்தனர். இதுகுறித்து அப்பகுதியினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூசிக்கொட்டாய் பகுதியில் இந்து, முஸ்லீம், அனைவரும் ஒன்றாக சகோதரர்களாக வாழ்ந்து வருகி றோம். இங்கிருந்து பள்ளி, கல்லூரி களுக்கு மாணவிகள் சென்று வரு கின்றனர். பெண்கள் சென்று தின மும் வேலை நிமித்தமாக வெளியே சென்று வருகின்றனர். இப்பகுதி யில், மதுபானக்கடை திறந்தால் பெண்கள், சிறுமிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும். மேலும், தேவையற்ற சண்டை, சமூக விரோத செயல்கள் ஏற்படும். எனவே, இப்பகுதியில் மதுபானக்கடை திறக்கக்கூடாது, என்றனர்.