districts

img

விளையாட்டு மைதானம் கேட்டு வாலிபர் சங்கம் மனு

தருமபுரி, ஜூலை 3- கைலாயபுரம் கிராமத்திற்கு விளை யாட்டு மைதானம் அமைத்துத்தர வேண் டும் என வலியுறுத்தி அரூர் வருவாய் கோட்டாட்சியரிடம் வாலிபர் சங்கத்தி னர் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத் திற்குட்பட்ட கைலாயபுரம் கிராமத்தில்,  500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.  சுமார் 150க்கும் மேற்பட்ட இளைஞர் கள் உள்ளனர். இதில் ஒருபகுதி இளை ஞர்கள் காவல்துறை மற்றும் ராணுவத் தில் இணைவதற்காக உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஏழை, எளிய மக்கள் வாழும் இக்கிராமத்தில் உடற்பயிற்சி கூடங்கள் இல்லை. வெளி யில் சென்று பயிற்சி பெற பொருளா தார வசதி இல்லை. எனவே, இப்பகுதி  இளைஞர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, பண்ணிமடுவு என்ற  இடத்திலுள்ள அரசு புறம்போக்கு நிலத் தில், விளையாட்டு மைதானமும், உடற் பயிற்சி கூடமும் அமைத்துத்தர வேண் டும் என வலியுறுத்தி அரூர் கோட்டாட் சியர் வில்சன் ராஜசேகரிடம் மனு அளிக் கப்பட்டது. இந்நிகழ்வில், இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவட்டப் பொறுப் பாளர் தி.வ.தனுசன், மாவட்ட துணைச் செயலாளர் குறளரசன், வட்டத் தலை வர் பிரவீன்குமார், வட்டச் செயலாளர் ஏங்கல்ஸ் ஆகியோர் கலந்து கொண்ட னர்.