தருமபுரி, ஆக.4- மலைக்கிராமங்களான கதிரிபுரம் முதல் கூசுமலை அடிவாரம் வரை தார்சாலையாக மாற்ற வேண்டும் என அக்கிராம மக்கள் ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனு வில் தெரிவித்துள்ளதாவது, தருமபுரி மாவட் டம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் ஆகிய இருவட்ட எல்லையில் உள்ளது. பையர்நத் தம் கதிரிபுரம் கூசுமலை ஆகிய மலை கிராமங் கள் உள்ளன. இங்குசுமார் 1500 குடும்பங்கள் உள்ளன.விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். பழங்குடி மக்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். கதிரிபுரத்திலிருந்து கூசுமலை அடிவாரம் வரை ஒரு கிலோ மீட்டர் தார் சாலை அமைக்க வேண்டும் என சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் மனு கொடுத்தோம். அதன் பின்னர் இந்த கிராமங்களுக்கிடையே பாதித்தார்சாலை அமைத்தனர். மீதி சாலை யில் ஜல்லி கொட்டப்பட்டு பல ஆண்டுகால மாக தார்ச்சாலை அமைக்கப்பட்டாமல் உள் ளது. இந்த ஜல்லிகொட்டப்பட்ட சாலையில் விவசாய பொருட்களை எடுத்துச்செல்ல முடியவில்லை. இருசக்கர வாகனத்தில் சென்றால் கொட் டப்பட்ட ஜல்லிகற்கலால் வாகன ஓட்டிகள் கிழே விழுகின்றனர். கர்ப்பினிகள் மற்றும் வயதானவர்கள் நோயாளிகள் மருத்துவம னைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இந்த சாலையில் ஆம்புலன்ஸ் கூட வருவ தில்லை. இதனால், சில நேரங்களில் உயிரி ழப்பும் ஏற்படுகிறது. பள்ளி மாணவர்கள் சைக்கிளில் செல்ல முடியவில்லை. எனவே மலை மக்களின் நலன் கருதி ஜல்லி கொட் டப்பட்ட சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.