நாமக்கல். ஏப்.23- பள்ளிபாளையம் ஒன்றியம், புதுப்பாளையத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பிடிஒவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நாமக்கல்,பள்ளிப்பாளையம் ஒன்றியம், புதுப்பாளை யம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சாக்கடை தூர் வார வேண்டும். தினசரி குடிநீர் வருவதை உறுதி செய்ய வேண் டும். பழுதடைந்த சாலைகளை சரிசெய்ய வேண்டும். தின மும் குப்பைகளை அகற்ற வேண்டும். துணை சுகாதார நிலையத்தில் உள்ள அம்மா மினி கிளினிக் நிலையான மருத்துவர், செவிலியர் நியமிக்க வேண்டும் எனக்கோரி பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி. புதுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ரவி ஆகியோ ரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுப்பாளையம் கிளை செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் மனு அளிக் கப்பட்டது.