கோவை, அக்.2- சோழ.நாகராஜன் எழு திய பெரியார் பிராமணர்க ளின் எதிரியா நூல் வெளி யீட்டு விழா ஞாயிறன்று நடை பெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட் டக்குழுவின் மாதாந்திர இலக்கிய சந் திப்பு தாமஸ் கிளப்பில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் தி.மணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சூர்யபிரகாஷ் வரவேற்புரையாற்றி னார். இதில், சோழ.நாகராஜன் எழுதிய பெரியார் பிராமணர்களின் எதிரியா நூலை தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் வெளியிட, மயில் சாமி, ராமதாஸ், மீ.உமா மகேஷ்வரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நூலா சிரியர் சோழ.நாகராஜன் ஏற்புரையாற் றினார். முன்னதாக “காந்தியும் பெரியா ரும்” என்கிற தலைப்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம் கருத்து ரையாற்றினார். இதனைத்தொடர்ந்து “கதராடையும் கைத்தடியும்” என்கிற தலைப்பில் கவிஞர் தங்க.முருகேசன் தலைமையில் கவியரங்கம் நடைபெற் றது. இதில் தமுஎகச மாவட்ட செயலாளர் அ.கரீம், முன்னாள் மாவட்ட செயலாளர் மு.ஆனந்தன், ந.முத்து உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.