districts

img

சொற்ப வருமானத்திலும் மக்கள் சேவை

ஏழை, எளிய மக்கள் படும் துன்பத்தையும், துயரத்தையும் கண்டு யார் உள்ளம் கசிந்து உருகுகிறதோ? யாருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடன டியாக ஏற்படுகிறதோ? அவர்களே உண்மையான தேச பக்தர் கள். அந்த வகையில், பல அவமானங்களை சந்தித்த போதி லும், கிடைக்கும் சொற்ப வருவாயில் மக்களுக்கு உதவி வருகி றார் கோவையைச் சேர்ந்த லோகநாதன். தனது உதவும் மனப்பான்மை மற்றும் சேவை குறித்து  லோகநாதனுடன் பேசுகையில், நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். 10 வயதில் என் தந் தையை இழந்தேன். குடும்ப வறுமையால் கல்வியை தொடர முடிவில்லை. அதனால், என் தாயுடன் இனைந்து இளநீர் விற்பனை செய்து வந்தேன். எனது 19 வயதில் ஆசிரமங்க ளுக்கு உணவு வழங்குவதில் தொடங்கியது என்னுடையது சேவை. பொதுமக்கள் பயன்படுத்திய துணிகளை தூக்கி எறிந்து விடுகிறார்கள். ஆனால், அந்த துணி கூட கிடைக் காமல் பலர் இருக்கின்றனர் என்பதை உணர்ந்து, வீடு வீடாக சென்று பழைய துணிகளை வாங்கி, அவைகளை  தரம் பிரித்து ஏழை மக்களுக்கு கொடுக்க தொடங்கினேன். என்னால் முடிந்த பண உதவியும் செய்ய தொடங்கினேன். தற்போது எனக்கு 59 வயதாகிறது. இன்று வரை மக்களுக் கான சேவை செய்து வருகிறேன். உதவி செய்யுமாறு கேட்ட போது, பல அவமானங்களை சந்தித்தேன். அதன்பின் தான்  எனது உழைப்பின் மூலமே உதவ வேண்டும் என்ற எண்ணம்  தோன்றியது. அதனால் கழிப்பறைகளை சுத்தம் செய்து அதில்  வரும் பணத்தில் இரண்டு வருடங்கள் வரை உதவி செய்து  வந்தேன். அதில் பேரானந்தம் கிடைத்தது. இதன்பின் வெல்டிங் வேலை செய்து, அதில் வரும் பணத்தை சிறுக சேமித்து உதவ ஆரம்பித்தேன். 20 வயதில்  எனக்க திருமணம் நடந்தது. எனது மனைவி உட்பட யாருக் கும் தெரியாமல் மக்களுக்கு உதவி செய்வது என்று முடிவு  எடுத்து உதவி செய்து வந்தேன். இந்த இரண்டு வருடங் கள் பிறகு ஒரு பத்திரிக்கை வாயிலாக உலகத்துக்கு தெரிய  வந்தது. பத்திரிக்கைதுறைக்கு சிறப்பு மரியாதை உண்டு.  நான்கு பேருக்கு என்னை அறிமுகப்படுத்தியது பத்தி ரிக்கை துறை தான். இதுபோன்ற பாராட்டுக்கள் மற்றும் வாழ்த் துக்கள் என்னை மென்மேலும் ஊக்கப்படுத்தியது. இப்பெழு தும் கூட பெரிய ஊதியம் இல்லை. உதவுவதற்காக தனி  வங்கி கணக்கு தொடங்கி சேமிப்பு செய்து வழங்கி வருகி றேன். இந்த சேவைக்காக 50க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள் ளேன். சேவைச் சுடர் விருது - 1988 ஆம் கரூர் மாவட்ட  திருக்குறள் பேரவை, சமூக சேவையைப் பாராட்டி கல்வித் துறை வழங்கிய நினைவுப் பரிசு - 2003 போன்ற பல விருது,  2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் அப்போதைய ஆளுநரும், தற்போது பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோ கித், கோவை கெத்து ஹீரோ விருது வழங்கினார். நேர்மைச்  சுடரொளி விருது 2019 சட்ட விழிப்புணர்வு இயக்கம், சத்யா  அரசு குழந்தைகள் காப்பகம் - சமூக நலத்துறை நன்கொடை யாளர் கேடயம் போன்ற பல விருதுகள் பெற்றுள்ளேன். தொடர்ந்து மக்கள் சேவை செய்வேன், என்றார். -எம்.சுவேதா