districts

img

ஊதியூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்

திருப்பூர், மார்ச் 15 – திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே ஊதியூர் பகுதியில் சிறுத்தை  நடமாட்டம் இருப்பது தெரியவந்துள் ளது. 3 ஆடுகள், 2 மாட்டு கன்று குட்டி கள் சிறுத்தை வேட்டையில் சிக்கி  உயிரிழந்துள்ளன. இதையடுத்து அந்த  சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையி னர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். கடந்த சில தினங்களாக ஊதியூர் பகு தியில் ஆடுகள், மாட்டு கன்றுகள் வனவி லங்கு தாக்கி உயிரிழந்துள்ளன. அத்து டன் அப்பகுதியில் சிறுத்தையின் கால டித்தடமும் கண்டறியப்பட்டது. இந்நி லையில் ஊதியூர் சுடுகாட்டு சுவற்றின் மீது சிறுத்தை படுத்திருந்ததைப் பார்த்த தாக அப்பகுதியைச் சேர்ந்த முத்தமிழ்ச் செல்வி என்ற பெண் கூறியிருக்கிறார். இதையடுத்து காங்கயம் வனத்து றைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி  செய்யப்பட்டுள்ள நிலையில், ஊதியூர்  மலை மீதுள்ள உத்தண்ட வேலாயுத சாமி கோவிலுக்கும், கொங்கண் சித்தர்  குகைக்கும் பொதுமக்கள் செல்ல வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். ஊதி யூர் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட் டம் உள்ளதால் பொதுமக்கள் மாலை 4  மணிக்கு மேல் மலைக்கும், மலை மேல்  உள்ள கோவில்களுக்கும் மறு அறி விப்பு வரும் வரை யாரும் செல்லக்கூ டாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவில் நுழைவாயில் முன் பாக சிறுத்தை நடமாட்டம் குறித்து பேனர் ஒன்றும் வனத்துறையினரால் வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் தங் கியிருக்கும் ஆதரவற்றவர்களை அங்கி ருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்துக் குச் செல்ல அறிவுறுத்தி உள்ளனர்.  இதுகுறித்து வனத்துறையினர் கூறு கையில், ஏழு கண்காணிப்பு கேமிராக் கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுவரை  கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை உருவம் பதிவாகவில்லை. ஆனாலும்  கால் தடங்களை வைத்து அப்பகுதி யில் வனத்துறையினர் தீவிர கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் உடுமலையில் இருந்து வேட் டைத் தடுப்பு காவலர்கள் 10 பேர் கொண்ட குழுவினர் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுகளுடன் ஊதியூர் வந்து  கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.