districts

img

சாலைப்பணி நடைபெறாததால் மக்கள் அவதி

அவிநாசி, ஆக.25- ஆலங்காட்டுபாளையம் அருகே பல மாதங்களுக்கு  முன்பு துவங்கப்பட்ட சாலைப் பணிகள் தற்போது வரையில் முடிவுறாததால் பொதுமக் கள் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். அவிநாசி ஒன்றியம், நம் பியம்பாளையம் ஊராட்சிக் குட்பட்டது 2 ஆவது வார்டு, ஆலங்காட்டுபாளையம். இங்குள்ள சென்னை கார்டன் பகுதியில் சுமார் 80க்கும் மேற் பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், 15 ஆவது நிதி  குழு மானியத்தில் சாலை  வசதிக்கு ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆறு மாதத்திற்கு  முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டு சாலையில் கற்கள் நிரப்பப்பட்டு துவங்கப்பட்ட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு தற்போது வரையில் முடிவுறாமல் உள்ளது.  சாலைப்பணிகள் நடைபெறாமல் குண்டும், குழியுமாக கற் கள் நிரம்பிய சாலையாக உள்ளதால், இவ்வழியே பய ணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். உடனடி யாக இந்த சாலைப்பணிகளை முடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.