districts

இரண்டு முறை கட்டணம்: சுங்கச்சாவடிகளுக்கு அபராதம்

சேலம், ஜூன் 22- காரில் சென்றவருக்கு 2 முறை கட்ட ணம் வசூல் செய்த விவகாரத்தில் 2 சுங்கச் சாவடிகளுக்கு அபராதம் விதித்து சேலம் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சேலம், 4 ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சபரிமணி. இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு ஆக.15 ஆம் தேதியன்று மேட்டுப்பட்டி சுங்கச் சாவடியை கடந்து சென்றார். அப்போது ரூ.50 அவருடைய பாஸ்டாக் கணக்கிலிருந்து பிடித் தம் செய்யப்பட்டது. அதன்பிறகு 3 நாட்கள் கழித்து மீண்டும் ரூ.235 பிடித்தம் செய்யப் பட்டதாகவும் அவரது செல்போன் எண் ணுக்கு குறுந்தகவல் (மெசேஜ்) வந்தது. இத னால் அதிர்ச்சியடைந்த சபரிமணி, சுங்கச் சாவடி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது. தொழில்நுட்ப கோளாறு கார ணமாக பணம் பிடிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது.  இதனிடையே, அதே ஆண்டு செப்.3 ஆம்  தேதியன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு அவர் காரில் சென்றார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரம் சுங்கச்சாவடியில் ரூ.50 கட்டணம் செலுத்திய அவரது கணக் கில் பிடித்தம் செய்யப்பட்டது. இதன்பிறகு ஒரு வாரம் கழித்து மீண்டும் ரூ.40 வீரசோழ புரம் சுங்கச்சாவடியில் பிடித்தம் செய்ததாக தகவல் வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடி அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர் கேட்டபோது, சம்பந்தப்பட்ட தனியார் பாஸ்டாக்-ஐ தொடர்பு கொள்ளு மாறு தெரிவித்தனர். இதுதொடர்பாக மத்திய பிரேதச மாநிலம், போபாலில் செயல்படும் அந்த பாஸ்டாக் நிறுவனத்திற்கு புகார்  அனுப்பியும் எவ்வித பதிலும் தெரிவிக்க வில்லை.  இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்ட மைப்பின் தலைவர் அசோகனிடம் சபரி மணி புகார் செய்தார். இதையடுத்து மேட்டுப் பட்டி மற்றும் வீரசோழபுரம் சுங்கச்சாவடி களுக்கு எதிராக சேலம் தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர் மற்றும் பாஸ்டாக் நிறுவ னத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணை யம், நுகர்வோர் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.275, சேவை குறைபாடு, நியாயமற்ற வர்த்தக முறை, மன உளைச் சல், வழக்கு செலவினை தொகை ரூ.4 ஆயி ரம் ஆகியவற்றை மேட்டுப்பட்டி, வீரசோழ புரம் சுங்கச்சாவடி நிர்வாகம் 2 மாதத்திற் குள் வழங்க வேண்டும் எனவும், சேவை குறை பாடு காரணமாக பாஸ்டாக் நிர்வாகம் ரூ.25 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்று தீர்ப் பளித்தது.