கோவை, பிப்.23- வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்த மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சினர் முற்றுகை யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசிக நிர்வாகிகள் கூறுகையில், வீடற்ற மக்களுக்கு வீடு மற்றும் வீட்டுமனை பட்டா கேட்டு ஒன்றரை ஆண்டுகளாக ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மனு அளித்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, வீடில்லாத மக்களுக்கு வீடுகளை வழங்கிடக்கோரி இந்த முற்றுகை போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர். முன்னதாக, ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இருந்து முழக்கங்களை எழுப்பி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊர்வலமாக வந்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீ சார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதில், ஏராள மான பெண்கள் பங்கேற்றனர்.