districts

img

“மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு வெற்றி”

பொள்ளாச்சி, டிச.7- ஆனைமலை தாலுகாவிற்குட் பட்ட பழங்குடியின மக்களின் நில உரிமைக்கான மார்க்சிஸ்ட் கட்சி யின் காத்திருப்பு போராட்டத்தின் எதிரொலியாக 22 பழங்குடியின குடும்பங்களுக்கு நிலம் அளவீடு செய்து வழங்கப்பட்டது. ஆனைமலை தாலுகாவிற்குட் பட்ட பழங்குடியின மக்களுக்கு பட்டா, சான்றிதழ் உள்ளிட்ட அடிப் படை தேவைகள் நிறைவேற்ற வலி யுறுத்தி கடந்த வாரத்தில் பொள் ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காத்திருப்பு போராட்டத்தை நடத்தியது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களை திரட்டி நடைபெற்ற போராட்டத்தை யடுத்து பொள்ளாச்சி சார் ஆட்சி யர் தலைமையில் வனத்துறை, வரு வாய்த்துறை அதிகாரிகள் பங் கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற் றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், ஆனைமலை தாலுகா செயலாளர் வி.எஸ்.பரமசிவம் உள்ளிட்ட தலை வர்கள் பங்கேற்றனர். இதில், பழங் குடியின மக்கள் வசிக்கிற 5 பகுதி யில் சிறப்பு முகாம் அமைப்பது என வும், பழங்குடியின மக்களுக்கான நிலத்தை அளவீடு செய்து உடனடி யாக வழங்க  நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்தனர்.  இதன்தொடர்ச்சியாக, பேச்சு வார்த்தை நடைபெற்ற 7 நாட்களுக் குள் பாறைப்பதி, காளியாபுரம், பழங்குடியின மக்கள் 22 குடும்பங்க ளுக்கு புதனன்று நில அளவை செய்யப்பட்டு பழங்குடி இன மக் களுக்கு நிலம் வழங்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என ஆனைமலை தாலுகா மார்க்சிஸ்ட் கட்சியின் செய லாளர் வி.எஸ்.பரமசிவம் தெரிவித் துள்ளார்.