districts

img

மின்வேலியில் சிக்கி கிளி உயிரிழப்பு

கோவை, பிப்.12- மாங்கரை அருகே அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் கிளி ஒன்று  சிக்கி உயிரிழந்தது. கோவையில் கடந்த  சில மாதங்களாக யானை கள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வரு கின்றன. இதனால் விவசாயிகள் மின்வேலி அமைத்து தற் காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்,  மாங்கரை அருகே உள்ள டைமண்ட் பேக்டரியில் அமைக்கப் பட்டிருந்த மின்வேலியில், புதனன்று எதிர்பாராத விதமாக  கிளி ஒன்று சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இதுகுறித்த  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையி னர் கிளியின் உடலை மீட்டு, ஆய்வு செய்தனர். வனவிலங்குகளின் நடமாட்டம் காரணமாக இரவு நேரங்களில்  மட்டுமே மின்வேலிகளில் மின்சாரம் பயன்படுத்த வேண்டும்  என்று வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. பகல் நேரத்தில்  மின்சாரம் பாய்ச்சி கிளியின் உயிரிழப்புக்கு காரணமான வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர்  தெரிவித்துள்ளனர்.