districts

img

நாடாளுமன்ற தேர்தல் – கோவையில் செல்பி பாய்ண்ட்

கோவை, மார்ச் 14- நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள  நிலையில், 100 சதவீத வாக்குப்ப திவை முன்னிறுத்தி, கோவையில் செல்பி பாய்ண்ட்டுகள் துவக்கி வைக் கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசு சார்பில் அதற் கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் 100% வாக் குப்பதிவு நடத்திட அரசு சார்பில் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக, கோவையில் செல்பி பாய்ண்ட்கள் அமைக்க ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில், ஆட்சியர் கிராந்திகுமார் பாடி  துவக்கி வைத்தார். முன்னதாக வாக்கா ளர் உறுதிமொழி, கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். அத னைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவ லகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு, கையெ ழுத்திட்டு செல்பி பாயிண்ட்டுகளில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.  மேலும் கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்க ளில் இந்த செல்பி பாய்ண்ட் மற்றும் கையெழுத்து இயக்க பேனர்கள் வைக் கப்பட உள்ளது. இந்த செல்பி பாயிண்ட் டில் “தேர்தல் பருவம் - தேசத்தின் பெரு மிதம்” “நமது இலக்கு 100% வாக்குப்ப திவு” “என் ஓட்டு என் உரிமை” என குறிப் பிடப்பட்டுள்ளது.