உடுமலை, டிச.30- பிஏபி திட்டத்தில் உடு மலை திருமூர்த்தி அணையி லிருந்து மூன்றாம் மண்டல பாசனத்திற்கு ஜனவரி 29 ஆம் தேதி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிஏபி பாசன திட்டத்தில், திருப்பூர், கோவை மாவட் டங்களில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், உடு மலை நகராட்சி மற்றும் உடு மலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் திட்டங்களும் செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன. இரண்டாம் மண் டல பாசனம் முடிவுபெறும் நிலையில் அடுத்த சுற்றுக்கு தண்ணீர் திறக்கும் வகையில் திட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. கண்காணிப்பு பொறியாளர் அலுவலத் தில் நடைபெற்ற திருமூர்த்தி அணை திட்டக் குழு கூட்டத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து ஐந்து சுற்றுகள் தண்ணீர் திறக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது. பின்னர் முறை யாக அரசாணை பெற்று தண்ணீர் திறக்கப்ப டும். 30ஆம் தேதி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 52.19 அடியாகவும். அணைக்கு நீர்வ ரத்து காண்டூர் கால்வாய் மூலம் வினாடிக்கு 730 கன அடியாகவும் உள்ளது.