திருப்பூர், ஏப்.21 - ஊராட்சிகளுக்கு கிடைக்கும் கனிம வள நிதியில் முழுவதும் தண்ணீர் மற் றும் மின்சார பாக்கிகளுக்கு செலவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டது குறித்து இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். இதையடுத்து கனிம வள நிதியில் 50 சதவிகிதத்தை ஊராட்சிமன்றத் தீர்மானத்தின் அடிப் படையில் வேலைகளுக்கு பயன்படுத்த லாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித் துள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மாவட்ட வளர்ச்சி பணி கள் ஆய்வுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் புதனன்று நடை பெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சி கள் உதவி இயக்குநர் கலந்து கொண் டார். திருப்பூர், ஊத்துக்குளி, பல்லடம் ஒன்றியங்களைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். நிதிக் குழு மாநில நிதியில் நடைபெற்று வரும் வேலைகள் குறித்தும், அதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் ஆய்வு செய் யப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் கள் வளர்ச்சிப் பணிகள் செய்வதில் தங்க ளுக்கு உள்ள பிரச்சனைகளை கூறிய பொழுது, மாவட்ட ஆட்சியர் நேரடி யாக அப்பிரச்சனைகளை தீர்வு காண வழி வகைகள் செய்வதாக உறுதி அளித் தார்.
ஊராட்சி மன்றத்தின் அனுமதி யின்றி கட்டிடங்களுக்கு மின்சார வாரி யம் மின் இணைப்புகள் கொடுப்பது குறித்தும், அதில் வரி வருவாய் பாதிக் கப்படுவது குறித்தும் இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன் கேள்வி எழுப்பினார். அதற்கு மாவட்ட ஆட்சியர் ஊராட் சிக்கு வரி கட்டாதவர்களுடைய மின் இணைப்புகளை ரத்து செய்ய சொல்லி மின்சார வாரியத்திற்கு கடிதம் கொடுக்கலாம் என தெரிவித்தார். கனிம வள நிதி ஒதுக்குவதை முழுவ தும் தண்ணீர் மற்றும் மின்சார பாக்கிக ளுக்கு செலுத்த வேண்டும். வேறு வேலைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவுகள் குறித்தும் இடுவாய் ஊராட்சித் தலைவர் கணேசன் கேள்வி எழுப்பினார். ஊராட்சிகளுக்கு வரும் கனிமவள நிதியில் 50 சதவீத தொகை களுக்கு ஊராட்சி மன்ற தீர்மான அடிப்ப டையில் வேலைகள் எடுத்துக் கொள்ள லாம் என தீர்வு சொல்லப்பட்டது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளுக்கு 2023- 24 ஆம் ஆண்டிற் கான வேலை உத்தரவு வராதது குறித்த கேள்விக்கு, நடவடிக்கை எடுத்து வேலை உத்தரவு விரைவில் வழங்கப்ப டும் என பதில் அளிக்கப்பட்டது என்றும் கணேசன் கூறினார்.