அவிநாசி, செப்.15 – அவிநாசி ஒன்றியம் வஞ்சிபாளையம் ரயில் நிலையம் அருகில் ரயில்வே துறை பாதை அமைக்கும் பணியால் அருகாமை குடி யிருப்பு மக்கள் பாதை இல்லாமல் அவதிப் படுகின்றனர். இப்பிரச்சனையில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பாதை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துசாமி வலியுறுத்தினார். அவிநாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகதீசன் தலைமையில், ஒன்றிய ஆணையர் ரமேஷ் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி பேசு கையில், முன்வைக்கப்பட்ட வேலை அறிக் கையில் தொகை, வருடம் போன்றவை குளறு படிகளாக உள்ளன எனவே தெளிவான அறிக்கை தேவை என்றார். மேலும், கணியாம்பூண்டி பகுதியில் தனி யாருக்கு சொந்தமான நிலத்தில் கழிவுநீர் தேங்கும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பலமுறை பல கூட்டங்களில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. உடனடி யாக தீர்வு காணப்பட வேண்டும். சென்னிமலைகவுண்டர் நகர் பகுதியில், 83 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி களை சேர்ந்த மக்கள் தற்பொழுது வஞ்சி பாளையம் உயர்நிலைப் பள்ளி அருகில் உள்ள சாலையைத்தான் பயன்படுத்துகின்ற னர். இந்த சாலையில் 200 மீட்டர் ரயில்வே வுக்கு சொந்தமானதாக உள்ளது. தற்பொ ழுது ரயில்வே துறை மூலம் பாதை அமைக் கும் பணி நடைபெற்று வருவதால், வீடுக ளுக்கு செல்ல பாதை இல்லாமல் இப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். ஊராட்சி ஒன் றிய நிர்வாகம் தலையிட்டு சாலை வசதி ஏற்ப டுத்தித் தரக்கோரி மாவட்ட ஆட்சியர், வட்டாட் சியர் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுக் கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய நிர்வாக மும், உரிய முறையில் கவனம் செலுத்தி தீர்வு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும். மங்கலம் செல்லும் சாலையில் மிக பிரம் மாண்டமாக ரெஸ்டாரன்ட் அமைந்துள்ளது. இதில் இருந்து கழிவுநீர் சாலையில் வெளி யேறுவதால் பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். சாமி நகரில் சாலை வசதி இல் லாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து திமுக சேது மாத வன் பேசுகையில், தேவம்பாளையம் பகுதி மயானத்திற்கு சுற்று சுவர் ஏற்படுத்தித் தர வேண்டும். சமுதாய நலக்கூடம் விரைவில் கட்டி முடிக்கப்பட வேண்டும். பெரியாயிபா ளையம் அரசு துவக்கப் பள்ளிக்கு கழிப்பறை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர்களை நிய மிக்க வேண்டும் என தெரிவித்தார். திமுகவை சேர்ந்த கார்த்திகேயன் பேசு கையில், மத்திய, மாநில அரசுகளின் பல் வேறு திட்டப்பணிகள் முன்கூட்டியே ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தெரிவிப்பதில்லை. முன் கூட்டியே கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த ஒன்றிய குழு தலைவர் ஜெகதீசன், ஆணை யர் ரமேஷ் ஆகியோர் தங்கள் கோரிக்கை விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என் றார்.