districts

img

பல்லடம்: ஏழு ஊராட்சிகளுக்கு கூடுதல் குடிநீர்

கோவை, நவ.5- பல்லடம் மேற்கு பகுதியில் உள்ள ஏழு ஊராட்சிகளுக்கு தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வழங்குவதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் முன்னிலையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதியளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடந்த நவ.2 ஆம் தேதியன்று பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேற்கு பகுதி ஊராட்சிகளில் திட்ட பணிகள் ஆய்வு மற்றும் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டார். அப்பொழுது, பருவாய், கரடிவாவி, மல்லேகவுண்டம்பாளையம், புளியம்பட்டி, கே கிருஷ்ணாபுரம், சித்தம் பலம், வடுகபாளையம் புதூர் ஆகிய ஏழு  ஊராட்சிகளில் 2001 ஆம் ஆண்டு மக்கள்  தொகை அடிப்படையில் குடிநீர் வழங்கப்பட் டுள்ளது.

இப்பொழுது புதிய குடியிருப்பு கள் உருவாகி மக்கள்தொகை பெருமள வில் உயர்ந்துள்ள நிலையில் அனைவருக் கும் குடிநீர் வழங்குவதில் மிகப்பெரிய பற் றாக்குறை, சிரமம் ஏற்படுகிறது. இப்பிரச்சனை குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக பி.ஆர்.நடராஜன் எம்.பி., உறுதியளித்து இருந்தார். இதையடுத்து சனி யன்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிக ளோடு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அலுவலகத்தில் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. குடிநீர் வடி கால் வாரிய செயற்பொறியாளர், உதவிப்  பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற் றும் சித்தம்பலம், புளியம்பட்டி, கோடாங்கி பாளையம் மல்லேகவுண்டம்பாளையம், கரடிவாவி, பருவாய் உள்ளிட்ட ஊராட்சி தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இதில், மேற்கண்ட ஏழு ஊராட்சிகளில் தற்போதுள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப குடி நீர் விநியோகத்தை அதிகப்படுத்தித் தருவ தாக உறுதியளித்தனர். இந்த நிகழ்வில் பல்ல டம் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேன்மொழி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சு.கிருஷ்ண மூர்த்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர். பரமசிவம் ஆகியோர் பங்கேற்றனர்.