districts

img

சிபிஎம் ராசிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளராக பி.கண்ணன் தேர்வு

நாமக்கல், அக். 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் ராசிபுரம் வடக்கு ஒன் றிய 10 ஆவது மாநாட்டில், ஒன் றிய செயலாளராக அறிவுடை நம்பி (எ) பி.கண்ணன் தேர்வு செய்யப்பட்டார். சிபிஎம் நாமக்கல் மாவட்ட ராசிபுரம் வடக்கு ஒன்றிய மாநாடு ராசிபுரம் வி.கே.ஆர்  திருமண மண் டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. எம்.ஜி. ராஜகோபால், பி.ராணி ஆகியோர் தலைமை  வகித்தனர். சி.சண்முகம் வரவேற்று பேசி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். தமிழ்மணி மாநாட்டை துவக்கி வைத்து உரை யாற்றினர். ஒன்றியச் செயலாளர் கோ.செல்வ ராசு வேலை அறிக்கையை முன்வைத்தார்.  ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அதே இடத்தில் தொடர்ந்து இயங்கிட வேண் டும். இராசிபுரம் நகரில் சொந்த  வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு  தமிழக அரசு இலவச வீட்டு மனை  பட்டா வழங்கிட வேண்டும்.  இரா.புதுப்பாளையம் மயானத் திற்கு சுற்றுச்சுவர் அமைத்து  சுகாதாரமாக பராமரிக்க  வேண்டும். வெண்ணந்தூரி லிருந்து நாமக்கல்லுக்கு பேருந்து வசதிகள் செய்து கொடுக்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது.  மாநாட்டில், 9 பேர் கொண்ட ராசிபு ரம் வடக்கு ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட் டது. வடக்கு ஒன்றிய செயலாளராக அறிவு டைநம்பி (எ) பி.கண்ணன் தேர்வு செய்யப்பட் டார். மாநாட்டை நிறைவு செய்து, மார்க்சிஸ்ட்  கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி நிறைவுறையாற்றினார்.