districts

img

உடல் உறுப்புகள் தானம்: 5 பேருக்கு மறுவாழ்வு

கோவை, மார்ச் 1- மூளைச்சாவு அடைந்த பெண்ணின்  உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 5 பேர் மறுவாழ்வு பெற உள்ள நிலை யில், இறந்த பெண்ணின் உடலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த தங்கமணி (43), தனது உறவி னருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்த தில் தலையில் பலத்த காயம் ஏற்பட் டது. மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருந்தவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதை மருத்துவக்குழு உறுதி செய்தது. இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர். இதனைத் தொடர்ந்து, தங்கமணியின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், கண்கள் தான மாக பெறப்பட்டன. கல்லீரல் சேலத்தில்  உள்ள தனியார் மருத்துவமனைக்கும் ஒரு சிறுநீரகம், கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறு நீரகம் சேலம் அரசு மருத்துவமனைக் கும் தானமாக வழங்கப்பட்டன. மறைந்த தங்கமணியின் உடல் உறுப்பு தானத் தின் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றனர். முன்னதாக, உயிரிழந்த தங்கமணி யின் உடலுக்கு கோவை அரசு மருத்து வமனை நிர்வாகத்தின் சார்பில் சனி யன்று அரசு மரியாதை செய்யப்பட்டு, பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு  அனுப்பி வைத்தனர்.