கோவை, ஜன.8- மலுமிச்சம்பட்டி ஊராட்சியை, மாநக ராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொதுமக்கள், வியாபாரிகள் கடைய டைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், சோமையம்பாளையம் உள் ளிட்ட ஊராட்சிகள், மற்றும் மதுக்கரை நக ராட்சி, வெள்ளலூர் பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாக தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அந்தந்த ஊராட்சி கிராம மக்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது. கீரணத்தம் ஊராட்சி கிராம மக்கள் அன்மையில் மாவட்ட ஆட் சியரை சந்தித்து மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என மனு அளித்தனர். இந்நிலையில் மலுமிச்சம்பட்டி கிராம ஊராட்சியை, மாந கராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு தெரி வித்து, ஊராட்சி பொதுமக்கள், வியாபாரி கள் மற்றும் அனைத்து கட்சியினர் கடைய டைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருந்த கம், பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடை களை தவிர முழுமையாக 500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்தும், கருப்பு கொடியை கட்டியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ள னர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகை யில், மலுமிச்சம்பட்டி ஊராட்சி, கோவை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள் ளோம். இது ஊராட்சியாகவே தொடர வேண் டும். இந்த ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊராக 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத் தில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்திட்டம் கிராம மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. மாநகராட்சியாக மாறுவதால் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள் ளது. தற்போது கடையடைப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. வரும் வெள்ளியன்று மலுமிச்சம்பட்டி சந்திப்பில் அனைத்து கட்சியி னர், பொதுமக்கள் இணைந்து மாபெரும் கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதை தொடர்ந்து வரும் திங்கள்கிழமை கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக் கும் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தனர்.